13 Jan 2024

மழை ஓந்துள்ள இந்நிலையில் வெல்லாவெளிப் பகுதியில் முதலைகளின் நடமாட்டம் அதிகம்.

SHARE

மழை ஓந்துள்ள இந்நிலையில் வெல்லாவெளிப் பகுதியில் முதலைகளின் நடமாட்டம் அதிகம்.

மட்டக்களப்பபு மாவட்டத்தில் பரவலாக பெய்துவந்த வடகீழ் பருவப் பெயற்சி மழை வீழ்ச்சி கடந்த இரு தினங்காளாக ஓய்ந்துள்ளது. எனினும் வீதிகளிலும், கிராமங்களிலும் தேங்கிக்கிடக்கின்ற வெள்ள நீர் வழிந்தோடுட முடியாமலுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.

மழை ஓய்ந்துள்ள இந்நிலையில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் வெல்லாவெளி, கோவில்பொரதீவு, பெரியபோரதீவுஉள்ளிட்ட பல பகுதிகளில் அண்மித்துள்ள குளங்களில் முதலைகள்  நடமாடித்திருவதனால் குளக்கரை ஓரங்களில் மேய்ச்சலுக்குச் செல்லும் ஆடுமாடு உள்ளிட்ட கால்நடைகளையும் முதலைகள் வேட்டையாடி வருவதாகவும்அப்பகுதிக்குச் செல்லும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் அப்பகுதி விவசாய அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.

அதிக மழைவீழ்ச்சியின் காரணமாக ஏற்பட்ட பெருவள்ளத்தில் மட்டக்களப்பு வாவியிலிருந்து கிராமங்களை அண்மித்துள்ள சிறிய குளங்களுக்கு இம்முதலைகள் வந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.






SHARE

Author: verified_user

0 Comments: