16 Sept 2023

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்றுப் பிரதேசத்தின் வீதி அபிவிருத்தி தொடர்பான கூட்டம்.

SHARE

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்றுப் பிரதேசத்தின் வீதி அபிவிருத்தி தொடர்பான கூட்டம்.

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப பிரதேசத்தில் முன்னெடுக்கப்படவுள்ள வீதி அபிவிருத்தி தொடர்பான கூட்டம் வெல்லாவெளியில் அமைந்துள்ள பிரதேச செயலக கேட்போர் கூட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை(15.09.2023) மாலை நடைபெற்றது.

போரதீவுப் பற்றுப் பிரதேச செயலாளர் சோ.ரங்கநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் வீதி அபிவருத்தி இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் பிரதிநிதியாக அவரது செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான பூபாலபிள்ளை பிராசந்தன், அவர்கள் கலந்து கொண்டு போரதீவுப்பற்றுப் பிரதேசத்திலர் முன்னெடுக்கப்படவுள்ள வீதி அபிவிருத்திகள் தொடர்பாக விளக்கமளித்தார்.

இதன்போது மேலும், உதவிப் பிரதேச செயலாளர் வி.துலாஞ்சனன், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சசிகுமார் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் குமரேசன், கிராம சேவகர்கள், கிராம மற்றும் மாதர் கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் என பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

போரதீவுப் பற்றுப் பிரதேசத்தில் அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் முதற்கட்டமாக ஒவொரு கிராமத்திலும் தலா ஒவ்வொரு வீதி புனரமைப்புச் செய்யப்படவுள்ளன. இவ்வாறு கிராமங்கள் தோறும் புனமைப்புச் செய்யவேண்டிய வீதிகளை முன்னுரிமை அடிப்படையில் அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர்கள், கிராம சேவை உத்தியோகஸ்த்தர்கள், மற்றும் கிராம மட்ட பொது அமைப்புக்கள் என பலரும் இணைந்து தேர்வு செய்து எதிர்வரும் 22 ஆம் திகதிக்கு முன்னர் தமக்கு அனுப்பி வைக்குமாறு இதன்போது கலந்து கொண்டிருந்த இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் பிரதிநிதி பூபாலபிள்ளை பிராசந்தன் தெரித்தார் தெரிவித்தார்.

















SHARE

Author: verified_user

0 Comments: