4 Jul 2023

வன்னி ஹோப் நிறுவனத்தின் அனுசரணையில் பழுகாமத்தில் நடைபெற்ற நடமாடும் சேவை.

SHARE

வன்னி ஹோப் நிறுவனத்தின் அனுசரணையில் பழுகாமத்தில் நடைபெற்ற நடமாடும் சேவை.

கிழக்கு மாகாண ஆளுநரின் பரிந்துரைக்கு அமைய சமூக சேவை திணைக்களத்தினால் போரதீவுப் பற்று பிரதேச செயலாளர் ஆர்.இராகுலநாயகி அவர்களின் வழிநடத்தலின் கீழ் வன்னி ஹோப் அவுஸ்ரேலியாநிறுவனத்தின் அனுசரணையில் பழுகாமம் கலாசார மண்டபத்தில் அப்பகுதி மக்களின் நன்மை கருதி நடமாடும் ஒன்று செவ்வாய்கிழை(04.07.2023) நடைபெற்றது.

இதன்போது காணி பயன்பாடுசமூகசேவைநோய்கொடுப்பனவுவிசேட தேவையுடையோருக்கான கொடுப்பனவு,70 வயதைப் பூர்த்தி செய்தோருக்கான கொடுப்பனவுமருத்துவ முகாம்சுதேச வைத்திய சேவைமூக்கு கண்ணாடி வழங்கல்உள்ளிட்ட பல சேவைகளை அப்பகுதி மக்கள் தமது காலடியிலேயே பெற்றுக் கொண்டதுடன்மக்களின் பல அரச தேவைகளுக்கான தீர்வுகளும் அவ்விடத்திலேயே பெற்றுக் கொடுக்கப்பட்டன.

இதில் போரதீவுப் பற்று பிரதேச செயலாளர் ஆர்.இராகுலநாயகிவெல்லாவெளி பிரதே சுகாதார வைத்திய அதிகாரிபிரதேச செயலக உயர் அதிகாரிகள்உத்தியோகஸ்த்தர்கள்வைத்தியர்கள்உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

இச்சேவை மூலம் அப்பகுதியிலுள்,  பழுகாமம் - 01, பழுகாமம் 02, விபுலானந்த புரம்மாவேற்குடாவீரஞ்சேனைவன்னி நகர் மற்றும் பெரியபோரதீவுபட்டாபுரம்உள்ளிட்ட பல கிராம சேவையாளர்களைச் சேர்ந்த 500 இற்கு மேற்பட்ட மக்கள் நன்மையடைந்தனர்.




 











SHARE

Author: verified_user

0 Comments: