5 Jul 2023

அமுல்ப்படுத்தப்படவுள்ள டெங்கு செயற்றிட்டம் தொடர்பாக தொண்டர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு.

SHARE

அமுல்ப்படுத்தப்படவுள்ள டெங்கு செயற்றிட்டம் தொடர்பாக தொண்டர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையினால் முன்னெடுக்கப்படவுள்ள டெங்கு செயற்றிட்டம் தொடர்பாக தொணடர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு புதன்கிழமை(05.07.2023) இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளைக் காரியாலயத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்புகளின் தாக்கங்கள் உணரப்பட்டடுள்ளமையால் இலங்கைச் செஞ்லுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையால் தெரிவு செய்யப்பட்ட பொது இடங்கள், பாடசாலைகள், உள்ளிட பல இடங்களில் சிரமதான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதோடு, வீடுகளுக்கும் நேரில் சென்று மக்களை அறிவுறுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளைத் தலைவர் .வசந்தராசா இதன்போது தெரிவித்தார்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தடன் இணைந்து, கிராமமட்ட அமைப்புக்கள், மற்றும் பொது மக்களின் ஆதரவுடன் வியாழக்கிழமை(06.07.2023) ஆரம்பிக்கப்படவுள்ள இந்நடவடிக்கை தொடற்சியாக நான்கு மாதங்களுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில், முன்னெடுக்கப்படவுள்ளன.

இதன்போது எவ்வாறு கடமையினை மேற்கொள்வது, டெங்கு நுளம்புகளின் தாக்கங்களை அவதானித்தல், எவ்வாறு வீட்டுத் தரிசிப்புக்களை மேற்கொள்வது, போன்ற பல விடையங்கள் தொடர்பில் இதன்போது மட்டக்களப்பு பிராந்திய சுகாதார வைத்திய பிரிவைச் சேர்ந்த வைத்தியர் .கார்த்திகா, வைத்தியர் திருமதி.டி.குணரெத்னம், ஆகியோhர் கலந்து கொண்டு இதன்போது கலந்து கொண்டு கருத்துக்களையும் விளக்கங்களையும், தொண்டர்களுக்கு வழங்கி வைத்தனர்.

இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளைத் தலைவர் .வசந்தராசா தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், கிளைநிறைவேற்று உத்தியோகஸ்த்தர் பி.வேணுஷா, திட்ட இணைப்பாளர் என்.முகிலன், மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.











SHARE

Author: verified_user

0 Comments: