4 Jul 2023

101வது சர்வதேச கூட்டுறவாளர் தினத்தை முன்னிட்டு நிலையான அபிவிருத்தி கூட்டுறவு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சாதனை சைக்கிள் பயணம்.

SHARE

101வது சர்வதேச கூட்டுறவாளர் தினத்தை முன்னிட்டு நிலையான அபிவிருத்தி  கூட்டுறவு  விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சாதனை சைக்கிள் பயணம்.

101  வது சர்வதேச கூட்டுறவாளர் தினத்தை முன்னிட்டு, கிழக்கு மாகாண கூற்றவு அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் தேசிய ரீதியில்  கூட்டுறவு  விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சாதனை சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள சைக்கிள் வீரர் ஓய்வு பெற்ற கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.கைலாயநாதன் அவர்களால் இந்த சைக்கிள் ஓட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து கடந்த 01.07.2023 அன்று ஆரம்பிக்கப்பட்டு திருமலை ஊடாக திங்கட்கிழமை(03.07.2023) மட்டக்களப்பை இவர் வந்தடைந்தார். மாவட்ட பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் ஏற்பாட்டில்  கிழக்கு மாகாண கூட்டுறவு திணைக்கள பணிப்பாளர் மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளரும்  நடராஜா சிவலிங்கம் தலைமையில் வரவேற்பு நிகழ்வு பிள்ளையாரடியில் இடம்பெற்றது  இவரை மாலை அணிவித்து வரவேற்று  மட்டக்களப்பு கூட்டுறவு மண்டபத்தில் இவருக்குரிய கௌரவ அளிக்கப்பட்டது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர் .வியாழேந்திரன் கலந்து கொண்டு இவரை கௌரவித்தார். மட்டு மாவட்ட, கோட்டை முனை, விளையாட்டு கழகத்தினரும் இவருக்கு நினைவு சின்னங்களை வழங்கி கௌரவித்தனர்.

இதன்போதுபிரதம அதிதியாக கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் .வியாழேந்திரன்  இங்கு உரையாற்றுகையில் யாழ்ப்பாணத்தில் இருந்து ஆரம்பமான இப்பயணம்  இவர் அம்பாரை நோக்கி செல்ல உள்ளத்துடன். அங்கிருந்து மலையகம் சென்று. மீண்டும் யாழ்ப்பாணத்தை சென்று தனது சாதனையை நிறைவு செய்ய உள்ளார். ஒரு வார காலத்தில் தனது பயணத்தை பூர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளார்.

தேசிய ரீதியில்  நிலையான அபிவிருத்தி இந்த வயதான காலத்திலும். சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, தனது சாதனையை  செய்ய உள்ளார். கடந்த காலங்களில் கூட்டுறவு அன்று தனியான அமைச்சாக இருந்தது தற்போது அவ்வாறு இல்லை. அது வர்த்தக வாணிப அமைச்சுக்குள் ஒன்றாக உள்ளது. முன்னைய காலத்தில் கூட்டுறவு என்பது ஒரு பலமான சக்தியாக இருந்தது. சில நாடுகளில் அது பலமாக உள்ளது. ஆனால் சில இடங்களில் வீழ்ச்சியை நோக்கி செல்லுகின்றது என அவர் இதன்போது தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் கூட்டுறவு  திணைக்கள உயர் அதிகாரிகள் மட்டக்களப்பு மாவட்ட கோட்டை முனை விளையாட்டு கழகத்தின பிரதிநிதிகள், அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.




















 

SHARE

Author: verified_user

0 Comments: