மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி மிலேனியம் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டிலும் அஞ்சனா வைத்தியசாலை களுவாஞ்சிகுடி அனுசரணையிலும் “மனிதனின் உயிர் அரியது அதனை காக்கும் இரத்தம் பெரியது”எனும் கருப்பொருளில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் மாபெரும் இரத்ததான முகாம் ஞாயிற்றுக்கிழமை; (26.02.2023) இடம்பெற்றது.
களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி க.புவனேந்திரநாதன் அவர்களின் பூரண வழிகாட்டலின் கீழ் வைத்தியர்கள், தாதிய பரிபாலகிகள், தாதிய உத்தியோகஸ்தர்கள், பொது சுகாதார கள உத்தியோகஸ்தர்கள் மற்றும் சிற்றூழியர்களின் ஒத்துழைப்பின் கீழ் மாபெரும் இரத்ததான முகாம் வெற்றிகரமாக இடம்பெற்றது. இதன்போது நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு குருதிக் கொடை வழங்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment