மூன்று மாதங்களின் பின்னர் பாடசாலாகள் ஆரம்பம் கிழக்கில் 588 பாடசாலகள் திறக்கப்பட்டன.
சுமார் மூன்று மாதங்களின் பின்னர் 200 மாணவர்களுக்கு குறைவாக கல்வி கற்கும் பாடசாலைகள்
வியாழக்கிழமை (21) திறக்கப்பட்டன.கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மாவட்டங்களில் 588 பாடசாலைகள்
இன்று திறக்கப்படுவதாக மாகாண கல்வி பணிப்பாளர் திருமதி புள்ளநாயகம் தெரிவித்தார்.மட்டக்களப்பு மாவட்டத்தில் 200 மாணவர்களுக்கு குறைவான பாடசாலைகள் திறக்கப்பட்டன.
மாணவர்கள்
சுகாதார நடைமுறைகளைப் பேணி பாடசாலைகளுக்கு வருகை தந்தனர்.
மட்டக்களப்பு கல்வி வலயத்தில் 36 பாடசாலைகள் திறக்கப்பட்டதாக வலய கல்வி பணிப்பாள திருமதி
சுஜாதா குலேந்திரன் தெரிவித்தார்.
மாணவர்களின் வரவு குறைவாக இருந்த போதிலும் அதிபார் ஆசிரியர்கள் பெருமளவில் சமுகமளித்திருந்தனர்.
0 Comments:
Post a Comment