11 Jun 2021

தீர்வுகள் தாமதம் - பிரச்சினைகள் முடிவற்றவை களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் தாத்தியர்கள் சுகாதார ஊழியர்கள் போராட்டம்.

SHARE

தீர்வுகள் தாமதம் - பிரச்சினைகள் முடிவற்றவை களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் தாத்தியர்கள் சுகாதார ஊழியர்கள்   போராட்டம்.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் தாத்தியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் வைத்தியசாலை முன்பாக வெள்ளிக்கிழமை(11) பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அனைத்து சுகாதார ஊழியர்களின் கண்களில் மணல் துவி வைத்திய நிர்வாகிகள் தனது அகப்பையால் தனது தட்டிக்கு மாத்திரம் பகிர்ந்து கொள்கிறார்கள்......

வைத்தியர் அல்லாத எந்தவொரு சுகாதார சேவையையும் பொருட்படுத்தாமல் வைத்திய ஊழியர்களுக்கு மாத்திரம் குறைந்தபட்சம் சுமார் ரூபா.41000 ரூபா அதிகரிக்கும் வகையில் இரகசியமான அமைச்சரவைப் பத்திரம்.

வைத்தியர் அல்லாத சுகாதார பணி உதவியாளர்களுக்கான மேலதிக நேரக் கொடுப்பனவு பெற்றுக் கொள்ளுதல் மிகவும் கடினமாகும். கடமைபுரியும் போது மணித்தியாலங்கள் வரையறை இல்லை என்றாலும் கொடுப்பனவு வழங்கும் போது மாத்திரம் வரையறுக்கப்பட்ட கொடுப்பனவாகும்.

நீதி, நியாயமானது எமக்கு கிடைக்காது என்பது தெளிவாகின்றது. வேலை நிறுத்தப் போராட்டத்தினை நடத்தும் நேரத்தில் ஊடகங்களில் வந்து அவசியமில்லாததை கூற தயாராகி வரும் அதிகாரிகளுக்கு நாம் கூறுகின்றோம் எம்மை இந்த நேரத்தில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட வைக்கவேண்டாம் என்பதாகும்.

அதற்கமைய, சுகாதார அமைச்சரினால் இரகசியமான அமைச்சரவைப் பத்திரத்தின் மூலம் வைத்திய ஊழியர்களுக்கு வழங்கவுள்ள 60 மணித்தியால மேலதிக நேரக் கொடுப்பனவு இவ்வாறு அதிகரிக்கப்படுகிறது.

வைத்திய ஊழியர்களின் தட்டிக்கு மாத்திரம் பகிரப்படுகின்ற மேற்குறிப்பிட்ட கொடுப்பனவு அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் வழங்குவதற்கு சுகாதார அமைச்சர் மற்றும் அரசாங்கமும் பொறுப்புக் கூற வேண்டும் என்பதனை நினைவுபடுத்துகின்றோம்.

அகப்பையால் பகிரவும், நீதியை நிலைநாட்டவும் வைத்திய ஊழியர்களுக்கு அதிகரித்த கொடுப்பனவினை ஒப்பிட்டு 78 வீதம் கொடுப்பனவு அதிகரிப்பினை அனைத்து உதவியாளர்களுக்கும் வழங்கவும்.

அதனால் எமது கீழ்வரும் கோரிக்கைகளை வழங்குவதற்கு சுகாதார அதிகாரிகளுக்கு அதனால் எமது கீழ்வரும் வலியுறுத்துகின்றோம்.

வைத்திய சேவையினை ஒப்பிட்டு 78 வீதம் கொடுப்பனவு அதிகரிப்பினை வழங்குதல்.

பொது நிர்வாக சுற்றறிக்கையின் படி அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் விசேட விடுமுறை வழங்குதல்.

அரசாங்கத்தால் அறிவிக்கப்படும் விசேட விடுமுறை நாளில் கடமைக்கு சமூகமளிக்கும் ஊழியர்களுக்கு விடுமுறை நாள் கொடுப்பனவு வழங்குதல்.

கொவிட் - 19 தடுப்பு செயற்திட்டத்தை வலுப்படுத்துவதற்காக சுகாதாரச் சேவை பணிப்பாளர்- நாயகத்தின் தலைமையில் தொழிற்ச் சங்க குழுவொன்று நியமித்தல் மற்றும் தீர்மானங்கள் எடுப்பதற்கு அவசியமாகும் போது அதற்கு சுகாதாரச் செயலாளரின் ஒத்துழைப்பினை வழங்குதல்.

வைத்தியசாலை கொவிட் குழுவிற்காக தொழிற்சங்க பிரதிநிதிகளை நியமித்தல் மற்றும் தொழிற் சங்க பங்குப்பற்றுதலுடன் வைத்தியசாலை ஆலோசனை குழு மீண்டும் நடைமுறைப்படுத்தல்.

பதலீட்டு, அமைய சுகாதார உழியர்களை நிரந்தரமாக்குதல்.

அனைத்து சுகாதார ஊழியர்களையும் ஆட்சேர்ப்பு செய்தல், வெற்றிடங்களை நிரப்புதல் விரைவாக மேற்கொள்ளல்.

பதலீட்டு அமைய சுகாதார உழியர்களுக்கு விசேட விடுமுறை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட காலங்களில் நாளாந்த சம்பளத்தினை செலுத்துதல்.

தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக என்95 முகக் கவசம், பாதுகாப்பான உடை ஆகிய வசதிகளை அனைத்து சுகாதார ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக வழங்குதல்.

பொது நிர்வாக சுற்றறிக்கையின் வழங்கப்பட்டுள்ளதன் படி மகப்பேறு சுகாதார ஊழியர்களுக்கு விசேட விடுமுறை வழங்குதல்.

அனைத்து ஊழியர்களுக்கும் செலுத்துகின்ற மேலதிக நேரக் கொடுப்பனவு, விடுமுறை நாள்கொடுப்பனவு, அழைப்பு கொடுப்பனவு வரையறைகளை நீக்குதல்.

அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் போக்குவரத்து வசதியினை முறையாக மற்றும் இலவசமாகவழங்குதல்.

சுகாதார ஊழியர்களுக்கு கொவிட் -19 தொற்று ஏற்படும் போது சிகிச்சை வழங்குதல் மற்றும்தனிமைப்படுத்தலுக்கான முறையான முறையொன்றினை தயாரித்தல்.

கடமைக்கு சமூகமளிப்பதற்கு விசேட இடையூறுகள் உள்ள ஊழியர்களுக்கு அருகிலுள்ள

வைத்தியசாலையில் சுகாதார நிலையமொன்றில் கடமையாற்ற இடமளித்தல்.

கொவிட் -19 கடமையினை மேற்கொள்கின்ற அனைத்து ஊழியர்களுக்கும் முறையாக உணவுவழங்குதல் மற்றும் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ள நாட்களில் அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் உணவு வழங்குவதற்காக முறையான சலுகை செயற்திட்டமொன்றினை நிறுவுதல். போன்ற கோரிக்கைகளை இதன்போது அவர்கள் முன்வைத்தனர்.










SHARE

Author: verified_user

0 Comments: