11 Mar 2021

பல்சமயத் தலைவர்கள் ஈஸ்டர் தாக்குதலினால் அழிவடைந்த மட்டு.சீயோன் தேவாலயத்திற்கு விஜயம்.

SHARE

பல்சமயத் தலைவர்கள் ஈஸ்டர் தாக்குதலினால் அழிவடைந்த மட்டு.சீயோன் தேவாலயத்திற்கு விஜயம்.தேசிய சமாதான பேரவையின்  பலசமய தலைவர்கள் அடங்கிய குழுவினர் செவ்வாய்கிழமை(09) மாலை  மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்தனர்.

மதங்கள் , இனங்களுக்கிடையில்  நல்லிணக்கத்தினையும் சமாதானத்தினையும் ஏற்படுத்தும் வகையில் கலந்துரையாடல்களை மேற்கொள்ளும்  முகமாக  மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள பலசமய தலைவர்கள் அடங்கிய குழுவினர்  ஏப்ரல் 21  ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் சேதமைத்துள்ள சீயோன் தேவாலத்தினை பார்வையிட்டதுடன்  ஆலய நிர்வாகிகளுடன் கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளனர் . இதனை தொடர்ந்து மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர்  ஆலயத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டனர் .  

சமாதான பேரவை முக்கியஸ்தர்களான கொரகொல்ல பியதிஸ்ஸ தேரர் கெசல்வத்துகொட சமநலவத்துகெர்ட ரேதார் மௌலவி எச்எம் சித்தீக்இஎம்.பீ.எம்.பிர்தௌஸ் நளீமி  உள்ளிட்ட சர்வமத தலைவர்களும் அடங்கியிருந்தனர். 

















SHARE

Author: verified_user

0 Comments: