களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் லயன்ஸ் கழகத்தால் வெள்ள அனர்த்த உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு.
மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலக நிருவாக எல்லைக்குட்பட்ட கிராமங்களில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட சுமார் 50 குடும்பங்களுக்கு லயன்ஸ் கழகத்தினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் சனிக்கிழமை(13) மாலை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
நிகழ்வில் லயன்ஸ் கழகத்தின் ஆளுநர் லயன்ஸ் ரசிக பிரியந்த, லயன்ஸ் ஆனந்த, லயன்ஸ் பொறியியலாளர் றஞ்சன், லயன்ஸ் சிறிரங்கன், லயன்ஸ் திருமதி பாரதி, அம்பாரை மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் லயன்ஸ் வே.ஜெகதீசன், லயன்ஸ் ராஜா, மற்றும் லயன்ஸ் கழகத்தின் களுவாஞ்சிகுடி கிளையின் தலைவர் புவனேந்திரன், செயலாளர் சந்தசேன பொருளாளர் ரவிராஜ் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர், பயனாளிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது அதிதிகளினால் பயனாளிகளுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
0 Comments:
Post a Comment