26 Jan 2021

மூன்று மாதங்களுக்குப் பின் மட்டக்களப்பிலிருந்து கொழும்பிற்கன நேரடி இரவு நேர கடுகதி ரெயில் சேவை ஆரம்பம்.

SHARE

மூன்று மாதங்களுக்குப் பின் மட்டக்களப்பிலிருந்து கொழும்பிற்கன நேரடி  இரவு நேர கடுகதி ரெயில் சேவை ஆரம்பம்.

மூன்று மாதங்களுக்குப் பின்னர் மட்டக்களப்பிலிருந்து கொழும்பிற்கான நேரடி இரவு நேர கடுகதி ரெயில் சேவை திங்கட்கிழமை(25) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் அச்சம் காரணமாக கடந்த அக்டோபர் மாதம் 24 ஆம் திகதி மட்டக்களப்பிலிருந்து கொழும்பிற்கான  இரவு நேர கடுகதி ரெயில் சேவை இடை நிறுத்தப்பட்டிருந்தது.

இவ்இரவு நேர கடுகதி ரெயில் சேவை மீண்டும் திங்கட்கிழமை (25) இரவு முதல் ஆரம்பிக்கப்பட்டது.

இரவு 8.15 மணிக்கு மட்டக்களப்பு பிரதான புகையிரத நிலையத்திலிருந்து கொழும்பிற்கான முதலாவது புகையிரத் புறப்பட்டுச் சென்றது. திங்கள் இரவு 8.15 மணிக்கு புறப்பட் புகையிரதம் செவ்வாய்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு கொழும்புக் கோட்டை புகையிரத நிலையத்தைச் சென்றடைந்தது.

சுகாதார நடைமுறைகளைப் பேணி பயணிகளிக் பெயர் விபரங்கள் பதிவு செய்யப்பட்டு உடல் வெப்பநிலமை பரிசோதனை செய்யப்பட்டு பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்..

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பகல் நேர ரெயில் சேவை ஆரம்பிக்கப்பட்டது.

மட்டக்களப்பிலிருந்து தினமும் வழமை போன்று மாலை 5.10க்கும், இரவு 8.15க்கும், காலை 6.10க்கும் ரெயில் சேவை இடம் பெறுமென மட்டக்களப்பு புகையிரத நிலைய அதிபர் .வை.நுபைஸ் தெரிவித்தார்.










SHARE

Author: verified_user

0 Comments: