மட்டக்களப்பில் அடர்ந்த முந்திரி தோட்டத்திலிருந்து ஆயுதங்கள் மீட்பு.
பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கமைய மட்டக்களப்பு விசேட புலனாய்வு பிரிவு பொறுபதிகாரி, மற்றும் மாவட்ட குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி.பண்டாரா தலைமையில் பொலிஸ் கான்ஸ்டபிள் பந்துல ஐயூப்கான் பி.சி.டி. அமில, போப்பிட்டிய, வன்னியசிங்க, ஜகான். விஜயசேகர ஆகிய பொலிஸ் குழுவினர் சம்பவதினமான செவ்வாய்க்கிழமை(29) மாலை ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சந்திவெளியில் வைத்தியசாலைக்கு அருகிலுள்ள முந்தியரிய தோட்டம் ஒன்றில் சோதனையில் ஈடுபட்டனர்.
இதன்போது மரம் ஒன்றின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரி 81 ரக துப்பாக்கி, 2 மகசீன், 49 ரவைகள், என்பனவற்றை மீட்டுள்ளதுடன். துப்பாக்கி மீட்கப்பட்ட முந்திரிகைத் தோட்ட உரிமையாளர் மீது விசாரணை மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment