1 Dec 2020

மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு திசை நோக்கி நகர்ந்து தற்போது வலுவான தாழமுக்கமாக வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்படுகின்றது.

SHARE

மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு திசை நோக்கி நகர்ந்து தற்போது வலுவான தாழமுக்கமாக வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்படுகின்றது.

வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்திற்கு அருகிலும் தென் கிழக்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்திற்கு மேலாகவும், காணப்படுகின்ற தாழமுக்கமானது கடந்த 6 மணித்தியாலங்களில் மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு திசை நோக்கி நகர்ந்து தற்போது வலுவான தாழமுக்கமாக  தென் மேற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்படுகிறது என மட்டக்களப்பு மாவட்ட வானிலை அவதான நிலையத்தின் பொறுப்பதிகாரி சுப்ரமணியம் ரமேஸ் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு வானிலை அவதான நிலையத்தில் செவ்வாய்கிழமை (01) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது வானிலை அதிகாரி மேலும்; கருத்து தெரிவிக்கையில்….

தற்போது திருகோணமலையில் இருந்து கிழக்கு தென்கிழக்காக 530 கிலோமீட்டர் தூரத்திலும், கன்னியாகுமரியில் இருந்து கிழக்கு தென்கிழக்காக 930 கிலோமீட்டர் தூரத்திலும், காணப்படுகின்றது. இது அடுத்து வரும் 24 மணித்தியாலத்தில் சூறாவளியாக வழுவடைந்து, திருகோணமலை பிரதேசத்துக்கு அருகில் எதிர்வரும் 2ஆம் திகதி மாலை அல்லது இரவு வேளையில் ஊடறுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இச்சந்தர்ப்பத்தில் கிழக்கு வடக்கு வடமத்திய ஊவா மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாத்தறை மாவட்டத்திலும் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இத்தாக்கத்தினால் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30 தொடக்கம் 40 கிலோ மீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்தோடு கடல் கொந்தளிப்பாக காணப்படுகின்ற காரணத்தினால் மீனவர்கள் முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ளுமாறு இதன்போது தெரிவித்தார்.



SHARE

Author: verified_user

0 Comments: