கிழக்கில் பரவியது கொரோனா வைரஸ் மட்டக்களப்பு திருகோணமலை அம்பாறை மாவட்டங்களில் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர்.
பேலியகொடை மீன்சந்தைக்கு வியாபாரத்துக்குச் சென்ற மட்டக்களப்பு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது சனிக்கிழமை (24.10.2020) உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களுடன் தொடர்புபட்டவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஏ. லதாகரன் தெரிவித்தார்.
பேலியகொட மீன் சந்தைக்குச் சென்றவர்கள் மூலம் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, பொத்துவில், கல்முனை, மட்டக்களப்பு போன்ற பகுதிகளில் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதான தகவல்கள் சனிக்கிழமை காலையிலிருந்து வெளிவரத் துவங்கியுள்ளன.
அதன்படி மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனையில் 11 பேரும் அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொத்துவில் பகுதிகளில் தலா ஒருவரும் திருகோணமலையில் 6 பேருமாக அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.
0 Comments:
Post a Comment