ஈழ மணித் திருநாட்டின் 3000 வருடங்களுக்கு முன் நாகர்கள் இனத்தை சேர்ந்த நாகராஜன் மன்னன் ஆட்சி செய்த, போகர் பெருமான் தவமிருந்த அற்புதமான சித்தர்களின் தவ பூமியாகிய மட்டக்களப்பு
வேலோடும் மலை முருகன் ஆலய கும்பாபிஷேக குடமுழுக்கை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (13) வேல்ப் பெருமானிற்கும், 12 சித்தர்களுக்கும் எண்னைக் காப்பு சாத்தும் நிகழ்வு மிகச் சிறப்பாக இடம்பெற்றது.
சித்தர்களின் குரல் ஏற்பாட்டில் இடம்பெறும் இந்த எண்ணைக்காப்பு சாற்றும் நிகழ்வுகளில் அகில உலக மஹா சித்தர்களின் குரல் அறக்கட்டளையின் ஆலோசகரும், காசி இந்து பல்கலைக்கழக வேத ஆச்சாரியாருமகிய ஸ்ரீலஸ்ரீ சிவ சங்கர் குருஜி மற்றும் வேல்சாமி ஆகியோரும் நிருவாக சபையினர், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு எண்ணைக்காப்பு சாத்தினர்.
0 Comments:
Post a Comment