மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா பிரதேசத்தில் புகையிரதத்தில் மோதி நேற்று மாலை நபரொருவர் உயிரிழந்துள்ளதாக கல்குடா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சந்தன விதானகே தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த எண்ணெய் ஏற்றும் புகையிரதத்தில் மோதியே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பில் இருந்து பாசிக்குடா நோக்கி பயணித்த பட்டா ரக வாகனம் தனது வேக கட்டுப்பாட்டை இழந்து கல்குடா புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள பாதுகாப்பு கடவையை உடைத்து கொண்டு புகையிரதத்தில் மோதுண்டுள்ளது.
இந்த விபத்தில் வாகனம் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் வாகனத்தின் சாரதியான செபஸ்தியன் அருள்நாதன் (வயது 48) என்பவரே காயங்களுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
இவ் விபத்து தொடர்பாக கல்குடா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.(twn)
0 Comments:
Post a Comment