23 Jul 2020

மட்டக்களப்பில் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத் தொண்டர்களுக்கு பயிற்சி.

SHARE
மட்டக்களப்பில் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத் தொண்டர்களுக்கு பயிற்சி.
இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையில் தெரிவு செய்யப்பட்ட தொண்டர்களுக்கு இலங்கைச் செஞ்சிலுவைச் சங்க கொள்கைகள், கொரோனா வைரஸின் தாக்கம், மற்றும், தொண்டர் ஆளுமை விருத்தி ஆகிய பயிற்சி நெறிகள் வியாழக்கிழமை (23) மட்டக்களப்புக் கிளைக் காரியாலயத்தில் இடம்பெற்றது.

இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளைத் தலைவர் த.சவந்தராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் செயலாளர் சா.மதிசுதன், பொருளாளர் வ.சக்திவேல், பதில் கிளை நிறைவேற்று உத்தியோகஸ்;த்தர் பி.வேணுஷா, திட்ட உத்தியோகஸ்த்தர் அன்டன் கெப்ரியல், மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது செஞ்சிலுவைச் சங்கம் பற்றிய கொள்கை விளக்கம் தொடர்பில் வ.சக்திவேல் அவர்களும், தொண்டர் ஆளுமை விருத்தி தொடர்பில் அ.தாயாகரன் அவர்களும், கொரோனா வைரஸின் தாக்கம், அதிலிருந்து பாதுகாப்பாக இருப்பது தொடர்பில் அன்டன் கெப்ரியல், அவர்களும் விளக்கமளித்தனர். 

மேலும் தொண்டர்கள் ஒன்றிணைந்து மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட பேண்டிய செயற்பாடுகள், வேலைத்திட்டங்கள் தொடர்பில் தலைவரால் இதன்போது எடுத்துரைக்கப்பட்டன.










SHARE

Author: verified_user

0 Comments: