மட் இந்துக்கல்லூரி 74 வது கல்லூரி தினம்.கிழக்கு மாகாணத்தில் பழைமை வாய்ந்ததும், புகழ் பூத்ததுமான மட்டக்களப்பு இந்துக் கல்லூரி 74 வது கல்லூரி தின நிகழ்வுகள் திங்கட்கிழமை (03.02.2020) காலை அதிபர் இரா.சண்டேஸ்வரன் தலைமையில் பாடசாலை பிரதான மண்டபத்தில் இதன்போது இடம்பெற்றது. அதிதிகள் வரவேர்க்கப்பட்டு பாடசாலைக்கொடி ஏற்றப்பட்டு பாடசாலைக் கீதம் வரவேற்பு நடனம் தலைமையுரை பழைய மாணவர் கௌரவிப்பு கலை, கலாச்சார நிகழ்வுகளும் உள்ளிட்ட பல நிகழ்வுகள் இதன்போது அரங்கேறின.
இங்கு கல்லூரி தினத்தை முன்னிட்டு இக்கல்லூரியின் பழைய மாணவர்கள் சிறப்பு அதிதிகளாகக் கலந்து கொண்டனர். இவர்கள் இங்கு பாடசாலை சமுகத்தினரால் கௌரவிக் கப்பட்டனர். நேத்ரா அலைவரிசையின் உதவிப் பணிப்பாளர் கலாநிதி எஸ்.மோசஸ், மட்டக்களப்பு கல்வி அபிவிருத்திச் சபை ஸ்தாபகத் தலைவர் சி.தேவசிங்கம், பட்டிருப்பு வலயக் பிரதிக் கல்விப் பணிப்பாளர் செ.மகேந்திரகுமார், ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் ந.வில்வரெட்ணம்,; மண்முனை வடக்கு பிரதேச செயலக தலைமை கிராம சேவை அதிகாரி செ.தில்லைநாதன ஆகியோர் இங்கு கௌரவிக்கப்பட்டனர்.
இந் நிகழ்வி;ட்கு கல்லூரியின் பிரதி அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் பாடசாலை அபிருத்திச் சங்க உறுப்பினர்கள் பழைய மாணவர்கள் முன்னாள் அதிபர்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்
0 Comments:
Post a Comment