52 வருட காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் கல்வி கலை விளையாட்டு சுகாதாரம் போன்ற பல்வேறு துறைகளினூடாக பிரதேச மக்களுக்கு சேவையாற்றி வரும் களுவாஞ்சிகுடி நியூ ஒலிம்பிக் விளையாட்டுக் கழகத்தின் புதிய நிர்வாகத் தெரிவு முன்னாள் கழக தலைவர் சிவஸ்ரீ.மு.அங்குசன் தலைமையில் சீ.மூ.இராமாணிக்கம் மண்டபத்தில் திங்கட் கிழமை (03) நடைபெற்றது.
இதன் போது கழகத் தலைவராக ந.புருஷோத்மன் தெரிவாகியதுடன் செயலாளராக யோ.லிபியன் மற்றும் பொருளாளராக ர.பிரசன்னா ஆகியோர் தெரிவாகினர். கழகத்தின் 53 வது வருட நிறைவினை அடுத்த வருடம் சிறப்பாக மேற்கொள்வது தொடர்பில் கலந்துரையாடி பல ஆக்க பூர்வமான முடிவுகள் எடுக்கப்பட்டதுடன் எதிர்வரும் காலங்களில் இப்பிரதேச மக்களுக்கு ஆற்ற வேண்டிய சமூக சேவை சார்ந்த செயற்பாடுகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டன.
இந்நிகழ்வில் கழகத்தின் சிரேஷ்ர உறுப்பினர்கள் கல்விமான்கள் புத்திஜீவிகள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment