30 Oct 2018

உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவியொருவர், சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

SHARE
மட்டக்களப்பு, கல்லடி பாலத்தின் கீழுள்ள வாவியில் மிதந்த நிலையில், க.பொ.த உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவியொருவர், இன்று (30) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட மாணவி, கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள கித்துள் கிராமத்தைச் சேர்ந்த வசந்தராஜா தேவஜானி (வயது -18) என, அடையாளம் காணப்பட்டுள்ளாரென, காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த மாணவி, காத்தான்குடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குடாவில், உறவினர் ஒருவரின் வீட்டிலிருந்து, கல்லடி, விவேகானந்தா மகளிர் கல்லூரியில் உயர்தர வர்த்தப் பிரிவில் படித்து வந்துள்ளார்.
இவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை (28), தனது சொந்த ஊரான கித்துள் கிராமத்துக்குச் செல்வதாக, வசித்துவரும் உறவினர் வீட்டில் தெரிவித்துவிட்டுச் சென்றுள்ளார்.
இந்நிலையில், பொதுமக்கள், பொலிஸாருக்கு வழங்கிய தகவல்களை வைத்து சடலம் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மாணவியின் மரணம், தற்கொலையா அல்லது கொலையா என, காத்தான்குடிப் பொலிஸார் துரிதமாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
SHARE

Author: verified_user

0 Comments: