மட்டக்களப்பு பெரியபுல்லுமலை அம்பகஹவத்தை காட்டுப் பகுதியில் காட்டு யானை வழிமறித்துத் துரத்தித் தாக்கியதில் அப்பகுதியால் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து கொண்டிருந்த தாயும் மகனும் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
திங்கட்கிழமை 27.08.2018 பொழுது புலரும்போது இடம்பெற்ற இச்சம்பவத்தில் மயிலம்பாவெளியைச் சேர்ந்த 65 வயதான தாயும் 32 வயதான மகனுமே காயமடைந்துள்ளனர்.
இவ்விருவரும் மட்டக்களப்பு பதுளை வீதியை அண்டிய தமது பழைய இடமான அம்பகஹவத்தை கிராமத்திற்குச் சென்று கொண்டிருக்கும்போது வழியில் குறிக்கிட்ட காட்டு யானை இவர்களைத் தும்பிக்கையால் துரத்தித் தாக்கியுள்ளது.
இதனால் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும் காயமடைந்து கீழே விழுந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பின்புறம் அமர்ந்து பயணித்த தாய் யானையின் தும்பிக்கை தாக்குதலில் இடுப்புப் பகுதி பாதிக்கப்பட்ட நிலையிலும் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற மகன் உடம்பின் பல்வேறு பகுதிகளில் காயம்பட்ட நிலையிலும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம்பற்றி கரடியனாறு பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
அம்பகஹவத்தையில் சனிக்கிழமையும் ஜோதி ஜோபட் (வயது 50) என்ற தொழிலாளி மீது காட்டு யானை தாக்கியதில் அவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment