மட்டக்களப்பு களுதவளை அருள்மிகு சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உத்சவத் திருவிழாவின் இறுதிநாள் வியாழக்கிழமை (21) பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ ஆலய முன்றலில் அமையப் பெற்றுள்ள தீர்த்தக் குளத்தில் தீர்த்தோற்சவம் இடம் பெற்றது.
இதன்போது மூலமூர்ததியாகிய பிள்ளையார், சிவன் உடனுறை பார்வதி சமேதரரும், முருகன் வள்ளி, தெய்வானை சமேதராய் முத்துச் சப்பிரபத்தில் உள் வீதி வெளி வீதி வலம் வந்து, பின்னர் திர்த்தமாடினர்.
இதன்போது பப்தர்கள், முள்ளுக் காவடி எடுத்தும், பறவைக் காவடி எடுத்தும், பற்பூரச் சட்டி ஏந்தியயும் தமது நேர்த்திக் கடன்னளை நீறைவேற்றிக் கொண்டனர்.
கடந்த 12.06.2018 அன்று ஆரம்பமான இவ்வாலயத் திருவிழா இன்று வியாழக்கிழமை (21) நடைபெற்ற தீர்த்தோற்சவத்துடன் நிறைவு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment