ஜனாதிபதி மற்றும் பிரதமரின் எண்ணக்கருவுக்கு அமைவாக மூவினமும் நான்கு மதத்தினையும் பின்பற்றுகின்ற நாம்இது போன்ற புதுவருட நிகழ்வுகளின்ஊடாக நாட்டில் நல்லிணத்தினைக் கொண்டுவர முடியும் என்று மட்டக்களப்பு மாவட் அரசாங்க அதிபர் மா. உதயகுமார் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட ஏற்பாட்டில் பிரதேச செயலகங்கள், ஸ்ரீலங்கா இராணுவம், கடற்படை, வான்படை, இலங்கைப் பொலிஸ் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் தமிழ் சிங்கள புத்தாண்டு விழா - 2018 ஞாயிற்றுக்கிழமை மாலை மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின் கச்சக்கொடி சுவாமி மலை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் தலைமையுரையாற்றும் போதே மாவட்ட செயலாளர் மா. உதயகுமார் இதனைத் தெரிவித்தார்.
தேசிய ஒற்றுமை மற்றும் சமய நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கோடும் அரசாங்கத்தின் அபிப்பிராயங்களை வெற்றி கொள்ளச் செய்யும் நோக்கத்துடனும் இவ் விளையாட்டு விழா மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இவ் தமிழ் சிங்கள புத்தாண்டு விழாவில், புத்தாண்டு பாரம்பரிய உணவகத்தைத் திறந்து வைத்தல், ஊஞ்சல், யானைக்குக் கண்வைத்தல், பலூன் ஊதி உடைத்தல், போத்தலில் நீர் நிரப்புதல், தலையணைச் சமர், முட்டை மாற்றுதல், ஊசியில் நூல் கொர்த்தல், சாக்கோட்டம், ஓலை பின்னுதல், தேங்காய் துருவுதல், கயிறு இழுத்தல், கோலம் போடுதல், விநோத உடை, மர்ம மனிதனைக் கண்டுபிடித்தல், காடு கட்டி, முட்டி உடைத்தல், கிராமியப்பாடல் போட்டி, தண்ணீரில் அப்பிள் சாப்பிடுதல், நீராடி பணிஸ் சாப்பிடுதல், நெல் குற்றி புடைத்தல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுக்கள் நடைபெற்றன.
மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிகாந்தின் வரவேற்புரையுடன் ஆரம்பமான இந்நிகழ்வு பரிசு வழங்கல்களை அடுத்து மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் திருமதி தினேஸ் தெட்சிணகௌரியின் நன்றியுரையுடன் நிறைவு பெற்றது.
இவ்விழாவில், மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர்கள், உதவிப்பிரதேச செயலாளர்கள், பிரதி, உதவி த்திட்டமிடல்பணிப்பாளர்கள், மாநகர சபை உறுப்பினர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உப தவிசாளர்கள், பொலிஸ் அதிகாரிகள், அரச உத்தியோகத்தகர்கள், பொது மக்கள் எனப் பலரும் கரந்து சிறப்பித்தனர்.
0 Comments:
Post a Comment