இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஸ்தாபகரும், முன்னாள் தலைவருமாகிய அமரர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் (தந்தை செல்வா) அவர்களின் 121வது ஜனன தின அனுஷ்டிப்பு சனிக்கிழமை (31) மட்டக்களப்பு நல்லையா வீதியில் அமைந்துள்ள கட்சிக் காரியாலத்தில் நடைபெற்றது.இந்நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர். கி.துரைராசங்களம், சிரேஷ்ட உபதலைவர் பொ.செல்வராசா, பாராளுமன்ற உறுப்பினர்களாக சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா..அரியநேத்திரன், அருட்தந்தை ஜோசப் மேரி, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மா.நடராசா, உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள், கட்சி அங்கத்தவர்கள், இளைஞர் அணி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.(tx:tcn)
0 Comments:
Post a Comment