17 Feb 2018

மட்.பட்.களுதாவளை மகாவித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி.

SHARE
மட்.பட்.களுதாவளை மகாவித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி எதிர்வரும் திங்கட்கிழமை (19) பிற்பகல் 2.30 மணிக்கு மேற்படி வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இவ்விளையாட்டுப் போட்டிக்கு பிரதம அதிதியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான ஞ.சிறிநேசன், மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் ஆகியோர் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளனர்.

மேலும் இந்நிகழ்வில்ல பட்டிருப்பு வலயக் கல்விப் பயிப்பாளர் ஆர்.சுகிர்தராஜன், கிழக்குப் பல்கலைக் கழக சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி ஜி.தில்லைநாதன்,  கல்முனை கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் வி.மயில்வாகனம் மற்றும் கல்வியியலாளர்கள், பொதுஅமைப்புக்களின் பிரதிநிதிகள், மாணவர்கள், பெற்றோர்கள உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொள்ளவுள்ளதாக மேற்படி பாடசாலை நிருவாகம் தெரிவித்துள்ளது.


SHARE

Author: verified_user

0 Comments: