
அன்று கொழும்பு இராமகிருஸ்ணமிஷன் மண்டபத்தில் இந்துமத அலுவல்கள் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றஅமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தலைமையில் இடம்பெற்றது.
இவ்விருது வழங்கலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறப்பாக இயங்கிவரும் அறநெறிப்பாடசாலைகளில் ஒன்றான குருக்கள்மடம் சிவநெறிமன்ற அறநெறிப்பாடசாலையில் கல்விபயிலும் ஜெயக்குமார் பிரவீன் 9 ஆம் வகுப்பு பிரிவில் கதாப்பிரசங்கப் போட்டியில் தேசியமட்டத்தில் முதலாம் இடத்தினையும் பேச்சாற்றல் போட்டியில் இரண்டாம் இடத்தினையும் பெற்றுதனக்கும் தனது குடும்பத்திற்கும் சிவநெறிமன்ற அறநெறிப்பாடசாலைக்கும் சிவநெறிமன்றத்திற்கும் குருக்கள்மடம் கிராமம் மற்றும் பிரதேசத்திற்கும் பெருமைடிசேர்த்துள்ளார்.
இவருக்கும் இவருக்குவழிகாட்டியாக இருந்த அறநெறிப்பாடசாலை அதிபர், ஆசிரியர்களுக்கும் சிவநெறிமன்றம் தங்களது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதாகமன்றத்தின் தலைவர் சாமஸ்ரீ தேசகீர்த்தி தேசாபிமானியும், அகில இலங்கை சமாதானநீதிவானுமாகிய வல்லிபுரம் குணசேகரம் தெரிவித்தார்.
கடந்த வருடங்களிலும் இந்த அறநெறிப் பாடசாலை மாணவர்கள் இவ்வாறு பல சாதனைககளைப் புரிந்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment