இலங்கை நீர் முகாமைத்துவ அமைச்சின் மேலதிக செயலாளராக கடமையாற்றிய மட்டக்களப்பைச் சேர்ந்த சீனித்தம்பி மோகனராஜா நீர்ப்பாசனத் திணைக்களத்தின் 37 வது நீர்ப்பாசனப் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டு பதவியுயர்த்தப்பட்டுள்ளார். இவர் தனது உத்தியோக பூர்வ கடமைகளை திங்கட் கிழமை (06) பெறுப்பேற்றுக் கொண்டார்.
மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து உருவானமுதல் நீர்ப்பாசனப் பணிப்பாளர் நாயகமான இவர் தனது பதவியேற்பை நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகமைத்துவ அமைச்சர்; விஜித் விஜயமுனிசொய்சா, அமைச்சின் செயலாளர் என்.ஏ.சிசிர குமார, மற்றம் ஓய்வுபெற்ற செயலாளர்கள், நீர்ப்பாசனப் பணிப்பாளர்கள், நீர்ப்பாசனத் திணைக்கள உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் மற்றும் முசலிபிரதேச விவசாயப் பெருமக்கள் முன்னிலையில் சகல சமயமதகுருமார்களின் ஆசியுடன் பதவிப் பிரமானம் பெற்றுக்கொண்டார்.
மட்டக்களப்பு, முகத்துவாரத்தில் 22-04-1960 பிறந்த சீனித்தம்பி மோகனராஜா தனது ஆரம்பக் கல்வியை பாலமீன்மடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையிலும் தற்போதைய மகாஜனக் கல்லூரியாகவுள்ள அரசடி மகாவித்தியாலயத்திலும் மட்.மெதடிஸ்ட் மத்திய கல்லூரியிலும் மட்.புனிதமிக்கேல் கல்லூரியிலும் பயின்று 1977 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டாவதாகச் சித்தியடைந்து 1978 ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு பொறியியல் துறைக்குத் தெரிவாகி 1982 ஆம் வருடம் பொறியியல் விஷேட பட்டம் பெற்று 1983 ஆம் ஆண்டு யூலைமாதம் 25 ஆம் திகதி நீர்ப்பாசனத் திணைக்களத்தில் நீர்ப்பாசனப் பொறியியலாளராக இணைந்தார்.
இவர் மட்டக்களப்பு பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் காரியாலயத்திலும் கல்லோயா இடதுகரை வாய்க்கால் புனருத்தாபனத் திட்டக் காரியாலயத்திலும், களுவாஞ்சிக்குடி நீர்ப்பாசனப் பொறியியலாளர் காரியாலயத்திலும் கடமையாற்றி 1987 ஆம் ஆண்டு கிரிந்திஓயா நீர்ப்பாசன மற்றும் குடியேற்றத் திட்டத்தில் நீர்ப்பாசனப் பொறியியலாளராகவும் வதிவிட பொறியியலாளராகவும் கடமையாற்றி 1991 ஆம் ஆண்டு நில்வளா வெள்ளத் தடுப்புத் திட்டத்தில் வதிவிட பொறியியலாளராகக் கடமையாற்றி மீண்டும் 1994 ஆம் வருடம் மட்டக்களப்பில் பதில் பிரதானநீர்ப்பாசனப் பொறியியலாளராக் கடமையாற்றியிருந்தார்.
மேலும் 1996 ஆம் வருடம் புத்தளம் பிரதிநீர்ப்பாசனப் பணிப்பாளர் காரியாலத்தில் பிரதான நீர்ப்பாசனப் பொறியியலாளராகக் கடமையாற்றிபின் முதுமானிப்படிப்பிற்காக நெதர்லாந்து சென்று தனது முதுமானிப்பட்டத்தைப் பெற்றுக்கொண்டு மீண்டும் இலங்கை திரும்பி நீர்ப்பாசனத் திணைக்களத்தில் கல்கமுவ நீர்ப்பாசனப் பயிற்சி நிறுவகத்தில் விரிவுரையாளராகவும் பிரதான நீர்ப்பாசனப் பொறியியலாளராகவும் கடமையாற்றி 2003 ஆம் வருடம் குருநாகலை பிரதிநீர்ப்பாசனப் பணிப்பாளராக பதவியுயர்வு பெற்று மீண்டும் 2005 ஆம் வருடம் கல்கமுவ நீர்ப்பாசனப் பயிற்சிநிறுவகத்தின் பணிப்பாளராக 2008 ஆம் வருடம் வரை கடமையாற்றி பின்னர் 2009 ஆம் வருடம் மட்டக்களப்பு பிரதிநீர்ப்பாசனப் பணிப்பாளராக இடமாற்றம் பெற்று 2012 ஆம் வருடம் மட்டக்களப்பு நீர்ப்பாசனப் பணிப்பாளராக தரமுயர்த்தப்பட்டிருந்தார்.
பின்னர் 2015 ஆம் ஆண்டு பிரதான காரியாலத்திற்கு நீர் முகாமைத்துவத்திற்கும் பயிற்சிக்குமான நீர்ப்பாசனப் பணிப்பாளராக பதவியுயர்வுபெற்று
2017 ஆம் ஆண்டு நீர்ப்பாசன நீர் முகாமைத்துவ அமைச்சிற்கு மேலதிகசெயலாளராக பதவியுயர்த்தப்பட்டார். தற்போது கடந்த திங்கட் கிழமை 06.11.2017) அன்று நீர்ப்பாசனத் திணைக்களத்தின் இலங்கையின் 37 ஆவது நீர்ப்பாசனப் பணிப்பாளர் நாயகமாக பதவியேற்றுக் கொண்டுள்ளார். என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment