9 Nov 2017

தரிசு நிலத்தில் நவீன தொழில் நுட்ப இயந்திரங்களைப் பயன்படுத்தி உப உணவுப் பயிர் செய்கைக்கான ஒருங்கிணைந்த விழிப்பூட்டல் நிகழ்வு.

SHARE
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேசத்தில் வம்மியடியூற்றுக் கிராமத்தில் சேனைக்காடு எனும் பகுதியில் சுமார் 30 வருடங்களாக செய்கை பண்ணப்படாமலிருந்த மேட்டுநிலக் காணியில் மட்டக்களப்பு விவசாயத் திணைக்களத்தின் முயற்சியின் பலனாக 27 விவசாயிகளுக்குச் சொந்தமான 50 ஏக்கர் காணியில் நவீன இயந்திரங்களைப் பயன்படுத்தி பயிர் விதைகள் நடும் நிகழ்வு இடம்பெற்றது
பாலையடிவட்டை விவசாயப் போதனாசிரியர் எஸ்.சசிகுமாரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு பிரதி விவசாயப் பணிப்பாளர் நாயகம் எம்.பரமேஸ்வரன், மட்டக்களப்பு தெற்கு உதவி விவசாயப் பணிப்பாளர் எம்.சிவஞானம், மற்றும் விவசாயப் போதனாசிரியர்கள், கிராம சேவை உத்தியோகஸ்தர், கிராம மட்ட பொது அமைப்புக்கள் விவசாயிகள், உப உணவு உற்பத்தியாளர் சங்கத்தினர் உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது ஒரே இடத்தில் ஒரே பார்வையின் கீழ் 50 ஏக்கர் நிலப்பரப்பில் கிலக்கடலை, பயறு, சோளன், பயற்றை உள்ளிட்ட உப உணவு விதைகள் நடப்பட்டதுடன், இவற்றுக்குத் தேவையான உள்ளீடுகளும், விவசாயிகளுக்கு 50 வீத மானிய அடிப்படையில் வழங்கி வைக்கப்பட்டமை குகறிப்பிடத்தக்கதாகும்.








SHARE

Author: verified_user

0 Comments: