(ஏ.ஹுஸைன்)
கிழக்குப் பல்கலைக் கழகத்தில் 1,2,3ஆம் ஆண்டுகளையும் சேர்ந்த மாணவர்களின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் ஒக்ரோபெர் 03ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமாவதாக அப்பல்கலைக்கழகத்தின் பிரதி உப வேந்தர் வைத்திய கலாநிதி கே.ஈ. கருணாகரன் தெரிவித்தார்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இறுதியாண்டு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக கிழக்குப் பல்கலைக்கழகம் செப்ரெம்பெர் 19ஆம் திகதி ஆரம்பமாகியுள்ள நிலையில் ஏனைய மாணவர்களுக்கு ஒக்ரோபெர் 03ஆம் திகதி ஆரம்பமாவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கிழக்குப் பல்கலைக் கழகம் வந்தாறுமூலை வளாகத்தில் கடந்த 3 மாதங்களாக இடம்பெற்றுவந்த அசாதாரண சூழ்நிலையை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் கடந்த 08.09.2017 அன்று கிழக்குப் பல்கலைக்கழகப் பேரவை, மத்தியஸ்த குழு மற்றும் மாணவர் பிரதிநிதிகள் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற முத்தரப்புப் பேச்சுவார்த்தையின் விளைவாக அனைத்துத் தரப்பினரும் தீர்மான அடிப்படையில் முடிவை எட்டியதையடுத்து மீண்டும் பல்கலைக் கழகம் அதன் முழுமையான கல்வி நடவடிக்கைகளுக்காக தற்போது திறக்கப்படுகிறது.
0 Comments:
Post a Comment