ஏறாவூரில் தாய் மற்றும் மகள் இரட்டைப் படுகொலைச் சந்தேக நபர்களில் ஐவர் மட்டக்களப்பு சிறைச்சாலை அதிகாரிகளால் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் புதன்கிழமை (செப்ரெம்பெர் 20, 2017) ஆஜர் செய்யப்பட்ட அதேவேளை பிணையில் விடுதலையான மற்றொருவர் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜரானார்.இவ்வேளையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது சந்தேக நபர்களில் ஐவரையும் ஒக்ரோபெர் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மேலதிக நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமாகிய முஹம்மத் இஸ்மாயில் முஹம்மத் றிஷ்வி Additional Magistrate and Additional District Judge Muhammath Ismail
Muhammath Rizvi வழக்கை அன்றைய தினத்திற்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
ஏறாவூர் நகர பிரதேசத்தில் முகாந்திரம் வீதி முதலாவது குறுக்கு ஒழுங்கையிலுள்ள வீட்டில் வசித்துவந்த தாயான நூர்முஹம்மது உஸைரா (வயது 56) அவரது திருமணமாகிய மகளான ஜெனீராபானு மாஹிர் (வயது 32) ஆகியோர் கடந்த செப்ரெம்பெர் 11ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 6 சந்தேக நபர்களும் கடந்த செப்ரெம்பெர் மாதத்திலிருந்து தொடர்ச்சியாக விளக்கமறியல் உத்தரவில் இருந்து வந்த நிலையில் தமக்குப் பிணை வழங்குமாறு கேட்டு சந்தேக நபர்களில் இருவரால் தாக்கல் செய்யப்பட்ட மனுமீதான விசாரணை கடந்த 12ஆம் திகதி மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.வை.எம். இர்ஸதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது சந்தேக நபர்களைப் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
ஏறாவூர் ஆதார வைத்தியசாலை பின் ஒழுங்கையைச் சேர்ந்த இஸ்மாயில் முஹம்மது பாஹிர் (வயது 25) மற்றும் ஏறாவூர் காட்டுப்பள்ளி வீதியைச் சேர்ந்த அபூபக்கர் முஹம்மது பிலால் (வயது 50) ஆகியோர் தலா இரண்டரை இலட்ச ரூபாய் ரொக்கப் பிணையிலும் தலா 5 இலட்ச ரூபாய் கொண்ட இரண்டு சரீரப் பிணைகளிலும் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
சந்தேக நபர்களில் அபூபக்கர் முஹம்மது பிலால் என்பவர் கடந்த வியாழக்கிழமை 14.09.2017 அன்று பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்து வெளியே வந்திருந்தார்.
ஆயினும், பிணை வழங்கப்பட்ட மற்றைய சந்தேக நபரான இஸ்மாயில் முஹம்மது பாஹிர் (வயது 25) என்பவர் பிணைத் தொகையான இரண்டரை இலட்ச ரூபா ரொக்கப் பணத்தை செலுத்தத் தவறியதனாலும், விலாசம் குறிப்பிடப்பட்டதில் வேறுபாடு காணப்பட்டதாலும் விடுவிக்கப்படாது தொடர்ந்தும் சிறையில் உள்ளார்.
ஏறாவூர் காட்டுப்பள்ளி வீதியைச் சேர்ந்த அபூபக்கர் முஹம்மது பிலால் (வயது 50), ஆதார வைத்தியசாலை பின் ஒழுங்கையைச் சேர்ந்த இஸ்மாயில் முஹம்மது பாஹிர் (வயது 24- கொல்லப்பட்ட பெண்ணின் கணவனுடைய சகோதரன்), அப்துல் மஜீத் மாவத்தை ஐயங்கேணியைச் சேர்ந்த வசம்பு என்றழைக்கப்படும் உஸனார் முஹம்மது தில்ஷான் (வயது 29), பாடசாலை வீதி மீராகேணியைச் சேர்ந்த கலீலுர் ரஹ்மான் அஹம்மது றாசிம் (வயது 23), பள்ளியடி வீதி, காவத்தமுனை, ஓட்டமாவடியைச் சேர்ந்த புஹாரி முஹம்மது அஸ்ஹர் (வயது 23), ஏறாவூர் நகர் போக்கர் வீதியைச் சேர்ந்த இஸ்மாயில் சப்ரின் (வயது 30) ஆகியோரே இரட்டைப் படுகொலையுடன் சம்பந்தமான வழக்கை எதிர்கொள்ளும் சந்தேக நபர்களாவர்.
0 Comments:
Post a Comment