மியன்மாரில் சித்திரவதைகளுக்கும் இனச்சுத்திகரிப்புக்கும் உள்ளாகிவரும் ரோஹிங்கியா முஸ்லிம்;களுக்கு அடைக்கலம் கொடுக்க இலங்கை உட்பட உலக நாடுகள் முன்வர வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தின் நஸீர் அஹமட் வேண்டுகோள் விடுத்தார்.இது தொடர்பில் ஊடகங்களுக்கு செவ்வாய்க்கிழமை 29.08.2017 கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது@
ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது பாரிய மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றும் சர்வதேச சமூகம் இன்னும் கண் திறந்ததாகத் தெரியவில்லை.
சிறியோர் முதல் பெரியோர் வரை நோயாளிகள், பெண்கள், சிறவர்கள், அங்கவீனர்கள், கர்ப்பிணித் தாய்மார் என்று எதுவித வித்தியாசமுமில்லாமல் முஸ்லிம்கள் என்ற காரணத்துக்காக எல்லோரும் பதைபதைக்க கொல்லப்படுகின்றார்கள்.
இது தொடர்பில் மியன்மார் அரசு மீது நடவடிக்கை மேற்கொள்ள இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள போதிலும் இதுவரை உலக நாடுகள் பாரியளவில் எவ்விதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்பதே நிதர்சனம்,
இந்த நூற்றாண்டின் பாரிய இனச் சுத்திகரிப்பில் ஒன்றாக கருதப்படும் இந்த மனித அவலம் குறித்து தொடர்ந்தும் உலக நாடுகள் மௌனம் காப்பது மனித குல அழிவுக்கு இட்டுச் செல்லும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்,
இலங்கையில் கடந்த 30 ஆண்டுகால யுத்தத்தின் போது உலக நாடுகள் தமது சுய அரசியல் இலாபம் கருதி கடைப்பிடித்த பல்வேறு கொள்கைகள் காரணமாகவே நாம் ஆயிரக்கணக்கான உயிர்களை இழக்க நேரிட்டது.
எனவே இது தவறை மியன்மார் விவகாரத்தில் உலக நாடுகள் விட்டு விடக் கூடாது, அதனால் பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டு அந்த மக்கள் நிர்க்கதியான பின்னர் அந்த மக்களுக்கு வழங்கப்படும் நீதி அந்த மக்களுக்கு செய்யும் அநீதியாகும்.
ஆகவே கனடா, நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளும் மத்திய கிழக்கு நாடுகளும் இந்த மக்களுக்கு அடைக்கலம் வழங்க முன்வரவேண்டும்.
இலங்கை முஸ்லிம்கள் ஒன்றுபட்டு ரோஹிங்கியா மக்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும்.
அது மாத்திரமல்லாமல் அன்றாட தொழுகையின் போது ரோஹிங்யா மக்களுக்காக பிரார்த்திக்க வேண்டும்.
0 Comments:
Post a Comment