26 Aug 2017

மாவேற்குடாப் பிள்ளையார் தேரோட்டம்.

SHARE
மட்டக்களப்பு மாவட்டம் திருப்பழுகாமம் ஸ்ரீ மாவேற்குடாப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த தோரேட்டம் விநாய சதுர்த்தி தினமான வெள்ளிக்கிழமை (25) மிகவும் விமர்சையாக இடம்பெற்றது.
மூல மூர்த்திக்கும், ஏனைய பரிபாரத் தெய்வங்களுக்குமான பூஜைகள் இடம்பெற்று பின்னர் வசந்த மண்டப பூஜைகள் நடைபெற்று, பின்னர் பிள்ளையார் சித்திரத்தேரில் ஆலய பிரதான வீதியில் வலம் வந்தார்.

இதன்போது பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம்பித்து தேர் இழுத்தனர். 

திருப்பழுகாமம் ஸ்ரீ மாவேற்குடாப் பிள்ளையார் ஆலய வருடாந்த திருவிழா கடந்த 15 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. சனிக்கிழமை (26) காலை இடம்பெறவுள்ள தீர்த்தோற்சவத்துடன் திருவிழா இனிதே நிறைவு பெறவுள்ளது.















SHARE

Author: verified_user

0 Comments: