மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளர் உட்பட மூன்று ஊடகவியலாளர்கள் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கு ஞாயிற்றுக் கிழமை (23) அழைக்கப்பட்டு, வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரால் குறித்த ஊடகவியலாளருக்கு எதிராக, மட்டக்களப்பு மாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் ஊடாக முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாடு தொடர்பாக வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காகவே குறித்த ஊடகவியலாளர்கள் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு
மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊழல் தொடர்பில் இணையத்தளம் ஒன்றில் வெளிவந்த செய்திகளுக்கு எதிராக ஊடகவியலாளர்களான வா.கிருஸ்ணகுமார், செ.நிலாந்தன், ஏ.நிதாகரன் ஆகியோர் மீது குறித்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கருத்துத் தெரிவிக்கையில்,
அண்மைக்காலமாக
மட்டக்களப்பில்
இருந்து வெளிவரும் செய்திகள் தொடர்பில் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் செயற்பாடுகள் மாவட்ட அரசாங்க அதிபரினால் பொலிஸ் நிலையம் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
ஜனநாயகத்தின்
குரல் வளையினை நசுக்கி சர்வாதிகார போக்குடன் ஒரு அரச அதிபர் செயற்படுவதை ஊடக சமூகம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.
தற்போது அரச அதிபருக்கு எதிராக அரசியல்வாதிகளும் பொது அமைப்புகளும் ஒன்றிணைந்துள்ள நிலையில் அது தொடர்பான செய்திகளை வெளிப்படுத்தவேண்டிய பொறுப்பு ஊடகவியலாளர்களுக்கு உள்ளது.
அதனைச் செய்யும்போது ஊடகவியலாளர்களை அச்சுறுத்த முனைவது ஜனநாயக விரோத போக்காகவே கருத வேண்டியுள்ளது.
எனவே இதனை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் வன்மையாக கண்டித்துள்ளதுடன் இதற்கு எதிராக எதிர்காலத்தில் ஜனநாயக ரீதியான நடவடிக்கைகளை ஒன்றியம் முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment