காத்தான்குடி பொலிஸ் பொறுப்பதிகாரியாக கடமை புரிந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை 23.07.2017 பிபிலை பொலிஸ் பொறுப்பதிகாரியாக இடமாற்றம் பெற்றுச் சென்ற ஆரியபந்து வெதகெதர காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பொது மக்களுக்கும் பொது அமைப்புக்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை 25.07.2017 ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர்
காத்தான்குடி பொலிஸ் பிரிவில் கடந்த மூன்று வருடங்களாக தான் நிலையப் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய வகையில் பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதற்காகவும் பொதுமக்களுடைய சுமுகமான வாழ்க்கையை உறுதி செய்வதற்காகவும் பிரதேச பொதுமக்களும் பொது அமைப்புக்களும் தனக்கு உதவியாகவும் ஒத்தாசையாகவும் இருந்து செயற்பட்டனர் என்று தெரிவித்தார்.
மேலும்@ காத்தான்குடியிலுள்ள பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், ஜம்இய்யதுல் உலமா சபை உட்பட சிவில் அமைப்புக்கள் மற்றும் இளைஞர்கள் அனைவருக்கும் தனது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதாக அவர் தெரிவித்தார்.
மேலும் தன்னுடைய இந்த இட மாற்றமானது மிகக்குறுகிய கால எல்லைக்குள் வழங்கப்பட்ட காரணத்தினால் காத்தான்குடியிலுள்ள அனைத்து அமைப்புக்களையும் தன்னால் நேரில் சந்தித்துப் பிரியாவிடை பெற்றுக்கொள்ள முடியாமல் போனதற்காக தன்னுடைய வருத்தத்தையும் அவர் தெரிவித்தார்.
அத்தோடு குறிப்பாக காத்தான்குடி வாழ் இளைஞர்கள் சமூகத்திற்கும் இந்நாட்டிற்கும் நல்ல முன்மாதிரி மிக்க தலைவர்களாக செயற்படும் விதமாக அவர்களை சமூக நிறுவனங்கள் மிகவும் முனைப்புடன் வழிகாட்டி செயற்பட வைக்க வேண்டும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
0 Comments:
Post a Comment