24 Jul 2017

கிழக்கில் கவன ஈர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவு கிழக்கிலங்கை தமிழாசிரியர் சங்கச் பொதுச் செயலாளர் எஸ். ஜெயராஜா

SHARE
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி எம். இளஞ்செழியனை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தைக் கண்டித்து, வடக்கு கிழக்கு மாகாணங்களில்,  செவ்வாய்க்கிழமை காலை இடம்பெறவிருக்கும் கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமது முழுமையான ஆதரவை வழங்குமாறு தமது அமைப்பின் அங்கத்தவர்களை தான் கேட்டுக் கொண்டுள்ளதாக கிழக்கு மாகாண தமிழாசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சிவக்கொழுந்து ஜெயராஜா தெரிவித்தார்.


வடக்கு, கிழக்கு ஒருங்கமைப்புக் குழு ஏற்பாடு செய்துள்ள இந்த கண்டன ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணி தொடக்கம் நண்பகல் வரை வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள 8 மாவட்டங்களின் 8 முக்கிய நகரங்களில் இடம்பெறவுள்ளது.

இதில் தமது கிழக்கு மாகாண தமிழாசிரியர் சங்கத்தின் அங்கத்தவர்கள் பங்கேற்பதோடு நீதித்துறைக்கு விடுக்கப்பட்ட சவாலையும் துப்பாக்கி வன்முறைக்கெதிரான தமது கண்டனத்தையும் பதிவு செய்யுமாறு தான் தமிழாசிரியர் சங்கத்தின் சார்பாகக் கேட்டுக் கொண்டுள்ளதாக ஜெயராஜா மேலும் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: