கிராம மட்டங்களில், விளையாட்டுக் கழகங்கள், இளைஞர் கழகங்கள், கிராம அபிவிருத்திச் சங்கங்கள், உள்ளிட்ட பல அமைப்புக்ள் இயங்கி வருகின்றன இவற்றுள் ஒன்றாகத்தான் சனசமூக நிலைய அமைப்புக்களும் இயங்கி வருகின்றன. ஆனால் ஏனைய அமைப்புக்களைப் பதிவு செய்வது போன்று இந்த சனசமூக நிலைய அமைப்புக்களைப் பதிவு செய்து எடுப்பதென்பது இலகுவான காரியம் அல்ல. சனசமூக நிலையம் ஒன்றைப் பதிவு செய்வதாயின் அது சிறப்பாகச் செயற்பட்டிருக்க வேண்டும், குறைந்தது ஒரு வாசிகசாலையை நடாத்துவதற்குரிய தகுதியைக் கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு வலுவான சனசமூக நிலையங்களைப் பதிவு செய்வதற்காக வேண்டி பிரதேச சபைகளில் சமர்ப்பிக்கப்படுகின்றபோது அவை அந்த சபையினால் முன்மொழியப்பட்டு அங்கீகரிக்கப் பட்டபின்னர்தான் அவை பதிவு செய்யப்படும்.
என மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆளையாளர் கா.சித்திரவேல் தெரிவித்துள்ளார்.
ஜனதக்ஸன் நிறுவனத்தினால் சன சமூக நிலைய அமைப்புக்களுக்கு காகிதாதிகளும், காசோலைகளும் வழங்கி வைக்கும் நிகழ்வு போரதீவுப் பற்று பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் செவ்வாய்க் கிழமை (20) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….
சன சமூக நிலையங்களின் பணி ஒரு வரையறைக்குட்பட்டதாக இல்லை இதற்காகவேண்டித்தான் இவற்றை நாம் இறுக்கமாக வைத்துள்ளோம். சன சமூக நிலையங்கள் அப்பகுதிக்குட்பட்ட கலை, கலாசார விளையாட்டு போன்ற பல அம்சங்களை அபிவிருத்தி செய்யக்கூடிய அளவிற்கு செயற்பட வேண்டும். சன சமூக நிலையங்களை நிருவகிப்பதற்காக வேண்டி ஒரு கiயெட ஒன்றும் உள்ளது. மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமராஸ அவர்கள் உள்ளுராட்சி அமைச்சராக இருந்த காலத்தில் உள்ளுராட்சி மன்றங்களின் விடையங்கள் கருத்தில் கொள்ளப்பட்டு வர்த்தமானி மூலமும் பிரகடனப் படுத்தப்பட்டுள்ளன.
சனசமூக நிலையங்கள் கடந்த ஒரு காலகட்டத்தில் மிகவும் பிரபல்யம் வாய்ந்தவையாகக் காணப்பட்டன, மக்களின் தீர்மானங்களை நிறைவேறும், இடங்களாகவும், பொது நல நோக்கங்களில் ஈடுபட்டவைகளாகவும்தான் அவை காணப்பட்டு வந்தன. கால ஓட்டத்தில் இந்த சன சமூக நிலையங்களில் செயற்பாடுகள் ஒரு மந்தமான நிலமைக்கு வந்தன.
இந்நிலையில்தான் உள்ளுராட்சி மாகாணசபை அமைச்சின் அனுமதியுடன், ஜனதக்ஸன் நிறுவனமும், கெயார் சர்வதேச நிறுவனமும், இந்த சனசமூக நிலையங்களைக் கட்டியெழுப்புவதற்கு திட்டங்களை வகுத்து அவற்றை அமுல்ப்படுத்தி வருகின்ற. அந்த வகையில் இந்த திட்டத்தை கிழக்கு மாகாணத்தில் செயற்படுத்தும் நிறுவனமாகத்தான் ஜனதக்ஸன் நிறுவனம் இயங்கி வருகின்றது. இவற்றுக்கிணங்க மட்டக்களப்பு மாட்டத்திலுள்ள அனைத்து சன சமூக நிலையங்களையும் ஒரே தடவையில் வளப்படுத்த முடியாது. முதற் கட்டமாக போரதீவுப்பற்று மற்றும் மண்முனை தென் மேற்கு ஆகிய 2 பிரதேச சபைகளின் கீழ் இயங்கும் அனைத்து சன சமூக நிலையங்களையும் வளப்படுத்துவதற்குரிய செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையிலும் கூட இங்கு வழங்கப்படுகின்ற காகிதாதிகளைக் கொண்டு இயங்குதற்கு பெரும்பாலான சனசமூக நிலையங்கள் ஒரு வலுவான நிலையிலில்லை. ஆனால் இச்செயற்றிட்டம் முடிவடைகின்ற நிலையில் இச்சன சமூக நிலையங்கள் வலுவடையக்கூடிய நிலமைக்கு இட்டுச்செல்லப்படும்.
திறப்படச் செயற்படும் சன சமூக நிலையங்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற கிழக்கு மாகாண பிரதம செயலாளரின் ஆலோசனையின் பிரகாரம், முதல் கட்டமாகத் தெரிவு செய்யப்பட்ட 10 சன சமூக நிலையங்களுக்கு தலா 10000 ரூபாய் காசோலைகள் வழங்கப்படுகின்றன. என அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment