மக்களின் பங்கேற்புடன் கொள்கை மற்றும் தீர்மானங்களை எடுக்கும் நோக்குடன் செயற்பாட்டு ரீதியில் கொண்டு செல்லும் செயற்றிட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக வேண்டி முதற்கட்டமாக முன்மாதிரியாகச் செயற்படுத்துவதற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் போரதீவுப்பற்று மற்றும், மண்முனை தென் மேற்கு ஆகிய இரண்டு பிரதேச சபைகளையும் நாம் தெரிவு செய்துள்ளோம். இதற்காக வேண்டி பிரதேச பிரதேச செயலகங்களையுமு; இணைத்து செயற்படுத்தி வருகின்றோம். இந்த திட்டத்தை அமுல்படுத்துவதற்காக வேண்டு அரச அதிகாரிகளும்,மற்றும் ஜனதக்ஸன் நிறுவன உத்தியோகஸ்த்தர்களும் பல பிற்சிகளைப் பெறு; வந்துள்ளார்கள்.
என கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஏ.எம்.அபயகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.
ஜனதக்ஸன் நிறுவனத்தினால் போரதீவுப் பற்று பிரதேசத்திலுள்ள 43 சன சமூக நிலைய அமைப்புக்களுக்கு தலா 5000 ரூபா பெறுமதியான காகிதாதிகளும், மண்முனை தென் மேற்கு பிரதேசத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 5 சன சமூக நிலைய அமைப்புக்களுக்கும், போரதீவுப்பற்றிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 5 சன சமூக நிலைய அமைப்புக்களுக்குமாக மொத்தம் 10 சன சமூக அமைப்புக்களுக்கு தலா 10000 ரூபா பெறுமதியான காசோலைகளும் வழங்கி வைக்கும் நிகழ்வு போரதீவுப் பற்று பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் செவ்வாய்க் கிழமை (20) நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….
அரச உத்தியோகஸ்த்தர்கள் யாராயிருப்பினும் அவர்கள் எந்த திணைக்களத்தில் கடமை புரிந்து வந்தாலும் அவர்களது நோக்கம் என்பது சேவைகள் அனைத்தும் மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதாகத்தான் இருக்க வேண்டும். இவ்வாறான பகுதிகளில் பிரதேச சபைகளிலும், பிரதேச செயலகங்களிலும் அரச உத்தியோகஸ்த்தர்களை நாம் நியமித்திருப்பது சேவைகள் அனைத்தும் மக்களைச் சென்றடைவதற்காகவேதான். நான் பிரதம செயலாளராக இருந்தாலும், பிராந்திய ஆணையாளராக இருந்தாலும், அபிவிருத்தி உத்தியோகஸ்த்தராக இருந்தலும் சரி அனைத்து அரச உத்தியோகஸ்த்தர்களின் ஒட்டுமொத்த நோக்கம் மக்களுக்கு சேவைகள் சென்றடையச் செய்வதுதான்.
பிரதேச சபைகளினூடாக மேற்கொள்ளப்படும் அனைத்து செயற்பாடுகளும் கிராம மட்டங்களிலே அமைந்துள்ள சனசமூக நிலைய சங்கங்களுடாகக் கொண்டு செல்வதுதான் அவர்களின் கடமைப்பாடாகும். போரதீவுப்பற்று பிரதேசத்தில் 43 சனசமூக அமைப்புக்களை உருவாக்கி அவர்களுக்கான செயற்பாட்டுத் திட்டங்களை உருவாக்கி அதனூடாக தேவைகளை முன்னுரிமைப்படுத்தியிருக்கின்றது.
இதுபோன்று மண்முனை தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களுக்கும் திட்டங்கள் வடிவடைக்கப்பட்டுள்ளன. இநிநிலையில்தான் மிக மிக பின்தங்கியுள்ள சனசமூக அமைப்புக்களுக்கு ஏதாவது உதவிகளை மேற்கொண்டு அவர்களை முன்கொணர வேண்டும் என என்னால் முன்மொழியப்பட்ட யோசனைக்கமைவாகவும், ஏனைய அமைப்புக்களைப் போன்று செயற்பாடுகளின்றி இருப்பதற்காகவும் இன்று காகிதாதிகள் மற்றும் காசோலைகளும் வழங்கப்பட்டுள்ளன. இதனை வைத்துக் கொண்டு சன சமூக அமைப்புக்கள் ஆராக்கியமான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். என அவர் மேலம் தெரிவித்தார்.
இதன்போது மட்டக்களப்பு பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கா.சித்திரவேல், போரதீவுப்பற்று மற்றும், மண்முனை தென்மேற்கு பிரதேச சபைகளின் செயலாளர்கள், ஜனதக்ஸன் நிறுவனத்தின் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment