7 Jun 2017

வயோதிபத் தம்பதிகள் வசித்த குடிசை ஏரிந்து நாசம்

SHARE

ஏறாவூர். தாமரைக்கேணி கிராமத்தில் வயோதிபத் தம்பதியினர் வசித்து வந்த குடிசை மின்னொழுக்கினால் எரிந்து சாம்பராகியுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
புதன்கிழமை (07.06.2017) நண்பகல் இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் குடிசையிலிருந்து அத்தனை உடமைகளும் முற்றாக எரிந்துள்ளதாக குடிசையில் வாழ்ந்து வந்த மீராமுஹைதீன் பாத்துமுத்து எனும் வயோதிபத் தம்பதியர் தெரிவித்தனர்.

இவர்கள் இருவரும் குடிசையை விட்டு வெளியேறிந்த சமயம் தீப்பற்றிக் கொண்டதால் அதிருஷ்ட வசமாக எவருக்கும் உயிராபத்துக்களோ காயங்களோ ஏற்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம்பற்றி ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.‪






SHARE

Author: verified_user

0 Comments: