3 Feb 2017

நிரந்தர தீர்வுக்கான பயணத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஒந்துழைப்பை நாங்கள் எதிர்பார்க்கின்றோம். - எதிர்க்கட்சித் தலைவர் சம்மந்தன்.

SHARE

இந்த நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிரந்தர தீர்வுக்கான பயணத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களின் ஒந்துழைப்பை நாங்கள் எதிபார்த்து இருக்கின்றோம், இதற்காக அவரை நாங்கள் நாடி நிற்கின்றோம
என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க் கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் புதிய கட்டிடத்தொகுதி திறப்புவிழா புதன் கிழமை (01) நடைபெற்றது. இதிலட கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந் நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரெத்தின, ஜப்பானிய தூதுவர் கெனிசி சுகுனுமா உட்பட மட்டக்களப்பு அம்பாரை மாவட்ட அரசியில் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….


இந்த வைத்தியசாலையை அமைக்க உதவிய ஜப்பான் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் எனது விசேட நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். களுவாஞ்சிகுடி என்றதும் என்கு இராசமாணிக்கம் அவர்களின் ஞாபகம் வருகின்றது. அவர் மிகவும் நல்லவர் அருடன் நான்சிறையில் இருந்துள்ளேன். இன்று நாங்கள் இந்த நாட்டில் ஒரு பேச்சுவார்ததை மூலம் சமரசமாக ஒரு புதிய அரசியல் சாசனத்தை உருவாக்கவதற்காக நாங்கள் அற்பணிப்போடு செயற்பட்டு வருகின்றோம் இதனுடாக ஒரு நிரந்தரமான நீதியான தீர்வினைக் கண்டு இந்த நாட்டில் வாழ்கின்ற மக்கள் மத்தியில் சம உரிமை அடிப்படையிலான ஒரு சமாதானத்தை உருவாக்கலாம் என எண்ணியுளளோம். இதனை ஏற்படுத்தவே நாங்கள் விரும்புகின்றோம்.

இப் பேச்சுவார்தை சம்பந்தமாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள்ச மீபத்தில் ஒரு கூட்டத்தில் பேசுகின்ற பொழுது புதிய அரசியல் சாசனத்தின் ஊடாக நாங்கள் பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கின்றோம். என்று கூறியிருக்கின்றார். உண்மையை கதைக்க வேண்டும் இதுவரையில் நடைபெறுகின்ற பேச்சுவார்த்தைகளில் ஒரு உடன்பாடு ஏற்பட்டிருக்கின்றது. அது என்னவென்றால் ஒருமித்த நாட்டுக்குள் பிரிக்கப்படாத நாட்டுக்குள், பிரிக்கப்பட முடியாத நாட்டுக்குள்  ஒரு தீர்வினை உருவாக்கபட வேண்டும் என்பதுதான் ஏற்றுக் கொள்ளபட்டுள்ளது.  நாட்டவர் எல்லோரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வாக அமைய வேண்டும். என்தையே நாங்கள் எதிபார்க்கின்றோம்.

அதாவது நாட்டில் வாழ்கின்ற சிங்கள மக்கள் சிறுபான்மை மக்கள், இஸ்லாமிய மக்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வாக அமையவேண்டும். நிற்சயமாக பிரியாத பிரிக்கபட முடியாத மக்கள் அனைவரும் நிரந்தரமாக ஒன்றாய் இருக்ககூடிய தீர்வாக அமையவேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். 

ஆகையால் நாங்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவருக்கு கூறுவது என்வென்றால் அவரை எனக்கு நன்றாக தெரியும் நீங்களும் எங்களுடைய இந்த பணியில் இணைய வேண்டும் உங்களுடைய ஒத்துழைப்பை நாங்கள் எதிபாரத்து நிற்கின்றோம், உங்கள் ஒத்துழைப்பை நாங்கள் நாடுகின்றோம். எனவே மக்கள் மத்தியில் துவேசத்தை கிழப்பாமல் மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தாமல்  மக்களை ஒற்றுமைபடுத்தி இந்த நாட்டின் உடைய தேசிய பிரச்சினைக்கு எழுபது வருடகாலமாக தீர்க்கப்படமால் இருக்கின்ற பிரச்சினைக்கு ஒரு நிரத்தரமான தீர்வினை காண்பதற்கு நீங்கள் உதவவேண்டும். என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் கேட்கின்றேன். இது உங்கள் கடமை இதனை தவறவிடவேண்டாம் எனக்கேட்டுக் கொள்வதாக அவர் இதன்போது தெரிவித்தார். 

SHARE

Author: verified_user

0 Comments: