28 Feb 2017

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் கோபாலரெத்தினம் பதவி உயர்வு பெற்றுச் செல்வதையிட்டு கௌரவிப்பு

SHARE
(க.விஜி)

இலங்கை நிருவாகசேவையில்  22 வருடம் உள்ளடங்களாக அரசசேவையில் 31 வருடம் சேவையாற்றி பதவி உயர்வுபெற்று இலங்கை நிதியமைச்சிற்கு  பதவி உயர்வு பெற்றுச் செல்லும் கமண்முனை தென் எருவில் பற்று பிரதேசசெயலாளர்  மூ.கோபாலரெத்தினம் அவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு  துறைநீலாவணையில் ஞாயிற்றுக்கிழமை (27)  துறைநீலாவணை தெற்கு  பல்தேவைக் கட்டிட மண்டபத்தில் துறைநீலாவணை தெற்கு முதலாம் பிரிவிற்கான கிராம அபிவிருத்தி சங்கத்தலைவர் தி.தயாளன் தலைமையில் இடம்பெற்றது.

இக்கௌரவிப்பு நிகழ்வில் பட்டிருப்பு வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி.நகுலேஸ்வரி புள்ளநாயகம், உதவிப் பிரதேசசெயலாளர் என்.நவநீதராசா, சமூகசேவை உத்தியோகஸ்தர் கே.சிவகுமார், துறைநீலாவணை கண்ணகியம்மன் ஆலயத்தின் முன்னாள் வண்ணக்கர் .சரவணமுத்து, துறைநீலாவணை சக்திவிநாயகர் ஆலயத் தலைவர் சோ.மயில்வாகனம், துறைநீலாவணை ஸ்ரீ தில்லையம்பலப் பிள்ளையார் ஆலயத்தலைவரும், அதிபருமான மு.இராஜகோபால், துறைநீலாவணை முத்துமாரியம்மன் ஆலயத் தலைவர் நாகப்பன் மாணிக்கராசா, கிராமசேவையாளர் .கனகசபை.

ஊடகவியலாளர்களார்களான சா.நடனசபேசன், செ.பேரின்பராசா, துறைநீலாவணை மகாவித்தியாலயத்தின் முதல்வர் தில்லையம்பலம் ஈஸ்பரன், துறைநீலாவணை முத்துமாரியம்மன் ஆலயத்தின் பிரதமகுரு ஸ்ரீவஸ்ரீ கு.நல்லராசா குருக்கள், துறைநீலாவணை தெற்கு பிரிவிற்கான கிராம அபிவிருத்தி சங்கத்தின்  முன்னாள் பொருளாளர் யோகராசா ரஜனிதாஸ் உட்பட கிராமத்தில் உள்ள பலர் கலந்துகொண்டனர்.


இதன்போது இப்பிரதேசத்தில் சிறந்த சேவையாற்றியமைக்காக பொன்னாடை போர்த்தி மலர் மாலை அணிவித்தும், பலரும் பாராட்டி இதன்போது உரை நிகழ்த்தினர்.











SHARE

Author: verified_user

0 Comments: