28 Feb 2017

மண்டூர் 14 பாடசாலையில் இரண்டு மாடி கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு

SHARE
(பழுகாமம் நிருபர்)

மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட எல்லைப்புற கிராமமான கணேசபுரம் மண்டூர் 14 அ.த.க.பாடசாலையில் இரண்டுமாடி கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று பாடசாலை அதிபர் சி.புஸ்பராசா தலைமையில் இடம்பெற்றது. 
அண்மைய பாடசாலை சிறந்த பாடசாலை  எனும் திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்டு 17மில்லியன் ரூபா செலவில் நிர்மானிக்கப்படவுள்ளது. இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன்,ஞா.சிறிநேசன்  மாகாண சபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம,இ இரா.துரைரெட்ணம், ஞா.கிருஷ்ணபிள் ளைஆகியோரும் கல்வி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.









SHARE

Author: verified_user

0 Comments: