அமைச்சர் ஹக்கீம் தமதுரையின்போது மேலும் தெரிவித்ததாவது,
சவால்கள் மிகுந்த இந்த ஆண்டில் எங்களது அமைச்சைப் பொறுத்தவரை கடும் வறட்சியுடன் கூடிய கோடை காலத்தை எதிர்நோக்குவதால், நன்கு திட்டமிட்ட அடிப்படையில் அதற்கு முகம்கொடுப்பதற்கான தயார்படுத்தலை மேற்கொண்டு வருகின்றோம்.
உலக வங்கியினதும், ஆசிய அபிவிருத்தி வங்கியினதும் நிதியுதவியுடனும், வெளிநாட்டு உதவிகளுடனும் நாடளாவிய ரீதியில் அநேக செயல்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
2030ஆம் ஆண்டை இலக்காக் கொண்டு பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளை காண்பதில் அரசு காட்டிவரும் அக்கறைக்கு ஏற்ப நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் கீழ் உள்ள தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களம் என்பவற்றினூடாக பல பில்லியன் ரூபாய்கள் செலவில் பாரிய செயல்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன என்றார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், அமைச்சின் செயலாளர் என்.டீ.ஹெட்டிஆராச்சி, இராஜாங்க அமைச்சரின் செயலாளர் வீ.பி.பீ.கே.வீரசிங்ஹ, மேலதிகச் செயலாளர்கள் உட்பட அமைச்சின் உயரதிகாரிகளும், ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment