13 Jan 2026

சிகை அலங்கார உரிமையாளர்கள், மற்றும் வெதுப்பக உரிமையாளர்களுடனான விசேட கூட்டம் - எழுக்கப்பட்ட இறுக்கமான முடிவுகள்.

SHARE

சிகை அலங்கார உரிமையாளர்கள், மற்றும் வெதுப்பக உரிமையாளர்களுடனான விசேட கூட்டம் - எழுக்கப்பட்ட இறுக்கமான முடிவுகள்.

மட்டக்களப்பு மாவட்டம்  மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட சிகை அலங்கார உரிமையாளர்கள் மற்றும் வெதுப்பக உரிமையாளர்களுக்குமிடையிலான விசேட கலந்துரையாடல் கூட்டம் இன்று செவ்வாய்கிழமை (13.01.2026) களுதாவளையில் அமைந்துள்ள பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தலைமையில் நடைபெற்றது.

அப்பிரதேச சபைக்குட்பட்ட சிகை அலங்கார நிலையங்களில் பாடசாலை மாணவர்களுக்கு ஏற்ற வகயில் சிகை அலங்காரம்  செய்ய வேண்டும், சிகை அலங்காரம் செய்யும் போது சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடக்கப்படல் வேண்டும், பாடசாலை மாணவர்களுக்கு மாதிரி(மொடலிங்) வடிவில் சிகை அலங்காரம் செய்ய முடியாது என இதன்போது முடிவெடுக்கப்பட்டன. 

மேலும் வெதுப்பக பொருட்கள் உற்பத்தியாளர்களின் பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டதுடன. வெதுப்பக உணவுப் பொருட்களை கிராமங்கள் தோறும் முச்சக்கர வண்டியில் கொண்டு சென்று விற்பனை செய்யும்போது ஒருவர் மாத்திரம் அதாவது சாரதி மாத்திரமே பயணம் செய்து பொருட்களை விற்பனை செய்தல், அந்த முச்சக்கர வண்டியின் வேகம் 15 கிலோமீற்றர் வேகத்தில் பயணம் செய்தல், 20 வயத்திற்கு மேற்பட்டவர்களை மாத்திரமே முச்சக்கர வண்டியை செலுத்துவதற்கு அனுமதித்தல், அவ்வாறு செல்லும் சாரதிகள், சுத்தம், சுகாதாரத்தைக் அவசியம் கடைப்பிடித்தல், ஒரு இறாத்தல் பாண் 140 ரூபாவிற்கு விற்பனை செய்தல், முச்சக்கர வண்டிகளில் இவ்வாறு வெதுப்பக பொருட்கள் உற்பத்தியாளர்களைவிற்பனை செய்பவர்கள் ஒருவருக்கொருவர் முரண்பதாது செயற்படுதல், இவ்வாறு முச்சக்க வண்டிகளில் விற்பனைகளில் ஈடுபடுபவர்கள் சிறுவர்கள், பெண்கள், பாடசாலை மாணவர்கள் போன்றோரிடத்தில் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்தல், இந்த நடைமுறைகளை மீறுபவர்களுக்கு பிரதேச சபையினால் நடவடிக்கை மேற்கொள்தல், போன்ற பல தீர்மானங்கள் இதன்போது எடுக்கப்பட்டன. 

இதன்போது பிரதித் தவிசாளர் வசீகரன், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், சிறுவர் நன்னடத்தை உத்தியோகஸ்த்தல்கள், பிரதேச சபை அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.






 

SHARE

Author: verified_user

0 Comments: