கிழக்கு
மாகாண சபைக்கு 2017ம் ஆண்டு அபிவிருத்திக்காக மூன்று மாவட்டத்திற்கும் ஐந்து அமைச்சுக்கும் சேர்த்து 274கோடி ரூபாய் பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 205 கோடி ரூபாய் பணத்தினை மத்திய அரசு
மானியமாக வழங்கியுள்ளது. அதேபோன்று விசேட திட்டத்திற்காக 69கோடி(உலக வங்கி) ரூபாய் பணத்தினையும் ஒதுக்கியுள்ளது. இதைவிட நான்கு வருட திட்டமாக 650கிலோ மீற்றர் வீதி அமைப்பு திட்டத்திற்காக வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கும், மாகாணத்தில் கிராம உட்கட்டமைப்பு, சிறிய குளம், வீதி புனரமைப்பு, குடிநீர் வழங்கல் போன்றவற்றினை அபிவிருத்தி செய்யும் நோக்கில் ஜேகா திட்டத்தின் மூலமாக மூன்று வருடங்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட விருக்கும்
திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டும் 2017ம் ஆண்டிற்கான நிதியொதுக்கீடு ஒதுக்கப்படாமல் மர்நிலையிலே இருந்து கொண்டிருக்கின்றது. என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் ஞாயிற்றுக் கிழமை (01.01.2017) குறிப்பிட்டார்.
இது
தொடர்பில் மேலும் அவர் கூறுகையில்,
உலக வங்கியின்
ஊடாக ஒதுக்கப்பட்டுள்ள 69 கோடி ரூபாய் பணத்தில் சுகாதார அபிவிருத்தி கருத்திட்டத்திற்காக
36 கோடி ரூபாய் பணமும், பாடசாலை கல்வியை அறிவு மையத்தின் அடிப்படையாக மாற்றும் செயற்றிட்டத்திற்காக
33 கோடி ரூபாய் பணமும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசின் மூலமாக வழங்கப்பட்டுள்ள 205 கோடி ரூபாய் பணத்தில் மாகாண விசேட செயற்பாடுகளுக்கு குறித்து ஒதுக்கிய கொடை பணமாக 154 கோடி ரூபாயும், பிராமண அடிப்படையிலான கொடை பணமாக 51 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த
வருட அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியும் உள்ளடங்கலாகவே தற்போது நிதி ஒதுக்கப்பட்டுள்ளது 274
கோடி ரூபா நிதியும் ஐந்து அமைச்சுக்கும், மூன்று மாவட்டத்திற்கும், திணைக்களத்திற்கும் பிரிக்கப்பட வேண்டும். மாவட்ட ரீதியாக பிரிக்கும் போது சனத்தொகை, விகிதாசாரம், வறுமை, காணிப்பரப்பளவு போன்ற விடயங்கள் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். இந்நியதி என்பது கிழக்கு மாகாணசபை நிதி அமைச்சினதும், திட்டமிடல் பிரிவிலும் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிதி
ஒதுக்கீடு தொடர்பாக 2016ம் ஆண்டு திட்டமிட்ட முறையில் வேலைத்திட்டத்தை செய்து காட்டியிருக்கிறது. ஆனால் சில பிரதேச செயலகங்களுக்கு நிதியொதுக்கவில்லை. சில இடங்களில் கட்சி ரீதியாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் வறுமை கவனத்தில் கொள்ளப்படவில்லை, சில ஒதுக்கீட்டில் விகிதாசாரம் பேணப்படவில்லை. இதை நிவர்த்தி செய்யும் முகமாக கிழக்கு மாகாணசபை முதலமைச்சரின் தலைமையில் பிரதம செயலாளர், நிதிச்செயலாளர், திட்டமிடல் பணிப்பாளர், முதலமைச்சின் செயலாளர் கல்வி, விவசாயம், வீதி அபிவிருத்தி, சுகாதாரம் தலைமையில் அபிவிருத்தி கூட்டம் மாகாண ரீதியாகவும், மாவட்ட ரீதியாகவும், பிரதேச ரீதியாகவும் கூட்டப்பட வேண்டும். இவை மட்டுமின்றி கிழக்கு மாகாணசபைக்கு இந்தவருடம், சென்ற வருடத்தைவிட குறைந்த நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல் மத்திய அமைச்சின் சுகாதாரம், கல்வி, உள்ளுராட்சி, வீதி அபிவிருத்தி விவசாயம் போன்றவற்றிற்கு பில்லியன் கணக்கிலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியை கிழக்;கு மாகாணசபைக்கு மத்திய அரசு ஒதுக்கும் போது இனமதபேதமின்றி கிழக்கு மாகாணத்தின்; நிதி ஒதுக்கீட்டு கொள்கையையும் கடைப்பிடித்து வழங்க வேண்டும். இது தொடர்பில் முதலமைச்சர், ஆளுனர், ஐந்து அமைச்சுக்கள் ஆகியோருக்கு கடிதம் அனுப்பி உள்ளதாகவும் கூறினார்.
0 Comments:
Post a Comment