22 Dec 2016

மாகாண சபை உறுப்பினர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கான கொடுப்பனவு கிடைக்காத போதிலும் மக்களுக்கான அபிவிருத்திக்கு பணத்தைத் தேடி காலடிக்குக் கொண்டு வருகின்றோம்.

SHARE
மாகாண சபை உறுப்பினர்களுக்கு கடந்த நொவெம்பெர் மற்றும் டிசெம்பெர் மாதங்களுக்கான கொடுப்பனவு இன்னமும் கிடைக்காத போதிலும்
மக்களுக்கான அபிவிருத்திக்கு பணத்தை எங்கிருந்தாவது தேடி காலடிக்குக் கொண்டு வருகின்றோம் என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

மட்டக்களப்பு - ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலகப் பிரிவின் கீழ் வரும் மிச்நகர்,  மீராகேணி, ஆறுமுகத்தான்குடியிருப்பு, ஏறாவூர் நகர் மற்றும் செங்கலடி உள்ளிட்ட பல ஊர்களை மாரிகால வெள்ளப்பாதிப்பிலிருந்து காப்பதற்காக ரூபாய் 36 மில்லியன் செலவில் வடிகாலமைப்புத் திட்டத்தை வியாழக்கிழமை (22.12.2016) ஆரம்பித்து வைத்து அவர் உரையாற்றினார்.

அங்கு அதிகாரிகள் பிரதேச பொதுமக்கள் மத்தியில் தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர்,

இப்பிரதேச மக்கள் மாரிகாலத்தில் தொடர்ச்சியாக  எதிர்கொண்டு வரும் வெள்ளப்பாதிப்பைத் தடுக்க நாம் அவசரமாக எடுத்த முயற்சிக்கு பயன் கிட்டியுள்ளது.

இடர் முகாமைத்துவ அமைச்சின் 36 மில்லியன் ரூபாய் நிதியளிப்புடன் வேலைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முக்கியமான வேலைத்திட்டங்களுக்குக் கூட அரசாங்கத்தால் நிதி அளிக்கப்படாமல் இருக்கின்ற வேளையிலும் நாம் மக்களின் தேவைகளையும் குறைகளையும் பிரச்சினைகளையும் முதனிலைப்படுத்தி அவற்றுக்கான நிதிகளை வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி நிதிகளைக் கொண்டு வந்து மக்களின் நலன்களைக் கவனிக்கின்றோம்.

மாகாண சபை உறுப்பினர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கான சம்பளம் இன்னும் வந்து சேரவில்லை.

எவ்வாறாயினும் நாம் சளைத்துப் போகாமல் மக்களின் அபிவிருத்தியில் குறியாக இருக்கின்றோம்.” என்றார்.






SHARE

Author: verified_user

0 Comments: