மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு 108 பெரும்பான்மை இனத்தினை சேர்ந்தவர்கள் இடமாற்றம்
பெற்று வந்திருப்பதாக பத்திரிகை வாயிலாக அறிந்தேன் ஏன் இந்த நிலமை கிழக்கு மகாணத்திலே
தமிழ் பேசுகின்ற மக்கள் அதிகமாக வாழுகின்ற ஒரு மாவட்டமாக மட்டக்களப்பு திகழுகின்ற வேளையில்
இந்த நல்லாட்சி அரசாங்கத்தால் 108பேரினை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றம்
செய்திருப்பது இந்த நல்லாட்சியினைக் கொண்டுவந்த சிறுபான்மை மக்களுக்கு இதனை விட இந்த
அரசாங்கம் பொல்லாத ஆட்சி என்பதற்கு என்ன இருக்கிறது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்
கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஞா.கிருஸ்ணப்பிள்ளை தெரிவித்தார்.
நாங்கள் எல்லா இடத்திலும் ஏமாந்தவர்களாக இந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
ஆட்சியில் அமர்த்தியவர்கள் ஆட்சி மாற்றத்தினை கொண்டுவந்தவர்கள் சிறுபான்மை மக்கள் ஆனால்
இன்று நடந்து கொண்டிருப்பது நல்லாட்சி என்ற பெயரிலே பொல்லாத ஆட்சியே நடைபெற்றுக் கொண்டிருப்பதாக
குறிப்பிட்டார்
மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட களுவாஞ்சிகுடி பொதுச்சந்தைக்கான
அடிக்கல் நாட்டும் வைபம் ஞாயிற்றுக் கிழமை (16) பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர்
க.சித்திரவேல் தலைமையில் நடைபெற்றது இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே
மாகாண வபை உறுப்பிர் இவ்வாறு குறிப்பிட்டார். மாகாண உள்ளூராட்சி அமைச்சின் 4மில்லியன்
நிதி ஒதுக்கீட்டின் கீழும் பிரதேச சபையின் 4.5 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் கீழுமாக
8.5 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கட்டப்படவுள்ள புதிய சந்தைக் கட்டடத் தொகுதிக்கான
அடிக்கல் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஷர் அஹமட் அவர்களினால் நடப்பட்டது. இந்
நிகழ்வில் கிழக்குமாகாண சபையின் பிரதி தவிசாளர் இ.பிரசன்னா மாகாண சபை உறுப்பினர்களான
கோ.கருணாகரன் மா.நடராஜா மற்றும் மாகாண உள்ளுராட்சி உதவி ஆணையாளர் பிரதேச செயலாளர் மூ.கோபாலரெட்ணம்
களுவாஞ்சிகுடி நகரத்தலைவர் அ.கந்தவேள் மற்றும் பிரதேச சபைச் செயலாளர் குபேரன் மற்றும்
வர்தகர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டதுடன் களுவாஞ்சிகுடி மாணிக்கப்பிள்ளையார்
ஆலய குரு சிவஸ்ரீ.அங்குசன் குருக்களினால் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்று அடிக்கல்
நாட்டி வைக்கப்பட்டதுடன் இறுதியாக முதலமைச்சர் பொதுச் சந்தையினைப் பார்வையிட்டு வர்த்தகர்களிடம்
குறைகளைக் கேட்டறிந்து கொண்டதுடன் பொருட்களையும் கொள்வனவு செய்தமை விசேட அம்சமாகும்.
0 Comments:
Post a Comment