20 Oct 2016

புற்றுநோய் விழிப்புணர்வு பிரச்சாரம்

SHARE
அச்சுறுத்தும் புற்றுநோயும் அதனைத் தவிர்ந்து கொள்ளும் வழிமுறைகளும் எனும் தொனிப் பொருளில் விழிப்புணர்வுப்
பிரச்சாரம் வெள்ளிக்கிழமை (ஒக்ரோபெர் 21, 2016) ஏறாவூர் மர்க்கசுல் இஸ்லாமி பள்ளிவாசலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் தௌஹீத் ஜமாஅத் அறிவித்துள்ளது.
அன்றைய தினம் இரவு 7 மணியிலிருந்து இரவு 10 மணிவரை விழிப்புணர்வு நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இந்த விழிப்புணர்வு நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்றுநோயியல் விஷேட வைத்திய நிபுணர் ஏ. இக்பால் கலந்து கொண்டு புற்றுநோயின் விபரீதங்கள் பற்றி பொதுமக்களைத் தெளிவூட்டவுள்ளார்.
புற்றுநோயின் ஆரம்ப நிலை, அறிகுறிகள், சிகிச்சை முறை, புற்றுநோயின் ஆபத்தான கட்டம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் பற்றிய தெளிவூட்டல் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE

Author: verified_user

0 Comments: