பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட காலம் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள
அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு காத்திரமான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் அவர் வெள்ளிக்கிழமை (23) விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது….
நாட்டிலுள்ள பிரதான பிரச்சினைகளுள் காணாமல்போனவர்கள் மற்றும் அரசியல் கைதிகள் தொடர்பிலான பிரச்சினையும் மிக முக்கிய ஒன்றாகும். இது தொடர்பில் கவனம் செலுத்தி தீர்வினைப் பெற்றுக் கொடுக்க வேண்டியது நல்லாட்சி அரசின் கடமையாகும்.
விசேடமாக, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு எவ்வித விசாரணைகளுமின்றி நீண்டகாலமாக பலர் சிறைகளில் வாடுகின்றனர். அவர்களை பொது மன்னிப்பின் அடிப்படையிலோ அல்லது நிபந்தனைகளின் அடிப்படையிலோ விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிப்பாக, சிறைகளில் வாழ்கின்ற இளைஞர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நாடாளுமன்றத்தில் பலரும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.
கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதி என்ற அடிப்படையில் அம் மக்கள் படும் துன்பங்கள் நன்கு அறிந்தவன். இதனால் நான் பல்வேறு சந்தர்பங்களில் இவ்விடயம் தொடர்பில் அழுத்தம் - திருத்தமாக பேசியுள்ளேன்.
கடந்த காலங்களில் இடம்பெற்ற பயங்கரவாத நடவடிக்கைகளில் நேரடியாகத் தொடர்புபட்டவர்கள் இன்று மன்னிக்கப்பட்டு அரசியல் மற்றும் ஏனைய துறைகளில் ஈடுபட்டுள்ளனர். அதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறான நிலையில், அசாதாரன சூழலில் கைதுசெய்யப்பட்ட அப்பாவி சகோதரர்கள் இன்னும் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை நியாயமற்ற ஒன்றாகும் என்பதுடன் அதனை ஏற்றுக் கொள்ளவும் முடியாது.
ஆகவே, இன்று யுத்தம் முடிவடைந்துள்ளது. நாட்டில்அமைதி சமாதானம் ஏற்பட்டுள்ளது. எல்லோரும் ஒற்றுமையாக வாழும் சூழல் உருவாகியுள்ளது. இந்த ஒற்றுமையான சமாதானமான அமைதியான சூழலில் கடந்த கால யுத்த சூழலில் பிடிக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டு சிறைகளில் வாடுகின்ற அத்தனை இளைஞர்களும் உடனடியாக ஏதோ ஒரு அடிப்படையில் விடுதலை செய்யப்பட வேண்டும் என அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
(வ.சக்திவேல் 077 6279 436> 23.09.2016)
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு மாநகர சபையும், இரண்டு நகரசபைகளும் ஒன்பது பிரதேசசபைகளும் உள்ளடங்கலாக 12 உள்ளுராட்சி சபைகள் இருக்கின்றது.
இச்சபைகளின் ஊடாக மேற்கொள்ளக்கூடிய வேலைத்திட்டங்கள் பலவற்றை சபையின் தேவையை கருத்தில் கொண்டு அதிகாரிகள் ஒப்பந்த அடிப்படையில் வெளி ஒப்பந்த காரர்களுக்கு வழங்கி வேலைகளை செய்கின்றனர். என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களின் சேவை குறித்து ஊடகங்களுக்கு இன்று(20) கருத்துதெரிவிக்கையிலே மாகாணசபை உறுப்பினர் இதனை தெரிவித்தார்.
மேலும் மாகாணசபை உறுப்பினர் இது தொடர்பில் தெரிவிக்கையில்,
உள்ளுராட்சி சபையின் ஊடாக செய்ய கூடிய பலவேலைகளை வெளியில் வழங்கி செய்வதினால் அந்த உள்ளுராட்சி சபைகளுக்குள் அரச உள்ளுராட்சி நிர்வாகத்தினுடாக வேலைகளை பெற முடியாத நிலை தோற்றுவிக்கப்படுகின்றது. இதனால் அரச நிருவாகத்தில் மக்கள் நம்பிக்கை இழந்து போகக்கூடிய நிலை இருக்கின்றது. உள்ளுராட்சிசபை இவ்வாறான வேலைகளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படியில்லாமல் தனியார்மயமாக்கல் கொள்கைகளை கிழக்கு மாகாணம் மேற்கொள்கின்றதா?
அவ்வாறு தனியாருக்கு வழங்குவது சரியாக இருந்தாலும், தனியார் பொது உடமை இல்லாமல் செயப்படக் கூடிய நிலை ஏற்படும். மேலும் ஒரு சிலர் இதனை பயன்படுத்திக்கொண்டு பல வேலைகளை வெளி ஒப்பந்த காரர்களுக்கு வழங்கி பணக் கையாடல்கள் நிகழ்வதாகவும் சொல்லப்படுகின்றது.
எனவே பல வளங்கள் உள்ள உள்ளுராட்சி சபைகளில் கிறவல் வீதி அமைத்தல், வடிகால் அமைப்பு, சிறிய பாலங்கள் அமைத்தல், வீதிவிளக்கு, வருடாந்த அனுமதி பத்திரம், வரி அறவீடு, குப்பைகளை துப்பரவு செய்தல் போன்ற பல இன்னும் வேலைளை உள்ளுராட்சி சபை செய்ய முடியும். அவ்வாறான வேலைகளை உள்ளுராட்சி சபைகளே செய்வதற்கு உள்ளுராட்சி அமைச்சர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
0 Comments:
Post a Comment