25 Sept 2016

உற்பத்தி திறன் போட்டியில் மகிழடித்தீவு பிரதேச வைத்தியசாலை அகில இலங்கை ரீதியில் மூன்றாம் இடத்தினை பெற்றுள்ளது.

SHARE
அகில இலங்கை ரீதியாக 2015ம் ஆண்டுக்காக நடாத்திய உற்பத்தி திறன் போட்டியிலே
மகிழடித்தீவு வைத்தியசாலைக்கு மூன்றாம் இடம் கிடைத்துள்ளது. 

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப்பகுதியில் முதன் முதலாக இவ்வைத்தியசாலையே இப்போட்டியில் மூன்றாம் இடத்தினை பெற்றதுடன்இ இவ்வைத்தியசாலை முதன்முறையாக குறித்த போட்டியில் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு வைத்தியசாலைகளும் பங்குபற்றியிருந்தன.  

போட்டி நடுவர்கள் அண்மையில் வைத்தியசாலைக்கு வருகைதந்து  உற்பத்தி திறன் குறித்து பல்வேறு பரிசீலனைகளை மேற் கொண்டிருந்தனர்.

வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி டொக்டர்.ரி.தவனேசன் தலைமையில் போட்டிக்காக விண்ணப்பிக்கப்பட்டு வைத்தியசாலை ஊழியர்கள்இ வைத்தியசாலை சமூகம் போன்றவற்றின் அர்ப்பணிப்பான செயற்பாட்டின் மூலமாக மூன்றாம் இடம் பெறப்பட்டுள்ளது.

வளப்பற்றாக்குறைஇ நிதிப்பற்றாக்குறை போன்ற சிரமங்களுடன் இருந்துகொண்டும் அயராத உழைப்பின் பயனால் இவ்விடத்தினை வைத்தியசாலை பெற்றுக்கொண்டுள்ள தாக இவ்வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி டொக்டர்.ரி.தவனேசன்தெரிவித்தார்  

SHARE

Author: verified_user

0 Comments: