25 Sept 2016

அதிகாரிகள் ஒப்பந்த அடிப்படையில் வெளி ஒப்பந்த காரர்களுக்கு வழங்கி வேலைகளை செய்கின்றனர்

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு மாநகர சபையும், இரண்டு நகரசபைகளும் ஒன்பது பிரதேசசபைகளும் உள்ளடங்கலாக 12 உள்ளுராட்சி சபைகள் இருக்கின்றது. இச்சபைகளின் ஊடாக மேற்கொள்ளக்கூடிய வேலைத்திட்டங்கள்
பலவற்றை சபையின் தேவையை  கருத்தில் கொண்டு அதிகாரிகள் ஒப்பந்த அடிப்படையில் வெளி ஒப்பந்த காரர்களுக்கு வழங்கி வேலைகளை செய்கின்றனர். என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களின் சேவை குறித்து ஊடகங்களுக்கு கருத்துதெரிவிக்கையிலே மாகாணசபை உறுப்பினர் இதனை தெரிவித்தார்

மேலும் மாகாணசபை உறுப்பினர் இது தொடர்பில் தெரிவிக்கையில்...


உள்ளுராட்சி சபையின்  ஊடாக செய்ய கூடிய பலவேலைகளை வெளியில் வழங்கி செய்வதினால் அந்த உள்ளுராட்சி சபைகளுக்குள் அரச உள்ளுராட்சி நிர்வாகத்தினுடாக வேலைகளை பெற முடியாத நிலை தோற்றுவிக்கப்படுகின்றது. இதனால்  அரச நிருவாகத்தில் மக்கள் நம்பிக்கை இழந்து போகக்கூடிய நிலை இருக்கின்றது. உள்ளுராட்சிசபை இவ்வாறான வேலைகளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படியில்லாமல் தனியார்மயமாக்கல் கொள்கைகளை கிழக்கு மாகாணம் மேற்கொள்கின்றதா? அவ்வாறு தனியாருக்கு வழங்குவது சரியாக இருந்தாலும்,  தனியார் பொது உடமை இல்லாமல் செயப்படக் கூடிய நிலை ஏற்படும்

மேலும் ஒரு சிலர் இதனை பயன்படுத்திக்கொண்டு பல வேலைகளை வெளி ஒப்பந்த காரர்களுக்கு வழங்கி பணக் கையாடல்கள் நிகழ்வதாகவும் சொல்லப்படுகின்றது. எனவே பல வளங்கள் உள்ள உள்ளுராட்சி சபைகளில் கிறவல் வீதி அமைத்தல், வடிகால் அமைப்பு, சிறிய பாலங்கள் அமைத்தல், வீதிவிளக்கு, வருடாந்த அனுமதி பத்திரம், வரி அறவீடு, குப்பைகளை துப்பரவு செய்தல் போன்ற பல இன்னும்  வேலைளை உள்ளுராட்சி சபை செய்ய முடியும். அவ்வாறான வேலைகளை உள்ளுராட்சி சபைகளே செய்வதற்கு உள்ளுராட்சி அமைச்சர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
SHARE

Author: verified_user

0 Comments: